20 ஆயிரம் சிரிய அகதிகளை ஏற்க பிரித்தானியா தீர்மானம்-

sriyaஉள்நாட்டு மோதல்கள் இடம்பெற்றுவரும் சிரியாவில் இருந்து சுமார் 20 ஆயிரம் அகதிகளை ஏற்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. அடுத்து வரும் ஐந்து வருடங்களில் இந்த அகதிகள் ஏற்பு இடம்பெறும் எனவும் பிரதமர் டேவிட் கெமஷரூன் குறிப்பிட்டுள்ளார். மோதல்களினால் பாதிப்புக்குள்ளாகும் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்க வேண்டும் என்ற தார்மீக அடிப்படையிலேயே இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்போது, பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அகதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.