மரண அறிவித்தல்

ploteயாழ். பருத்தித்துறையை பிறப்பிடமாகவும், இல-403, மின்சாரநிலைய வீதி, திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை வின்சென்ற் கெனடி அவர்கள் இன்று 09.09.2014 புதன்கிழமை மரணமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினரான தோழர் கெனடி அவர்கள் கழக மத்தியகுழு உறுப்பினரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பருத்துத்துறை நகரபிதாவுமாவார். தனது பணிகளிலே சிறப்பான செயற்திறனை வெளிப்படுத்தி தோழர்கள் மற்றும் மக்களின் மத்தியில் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்த சிரேஸ்ட உறுப்பினர் தோழர் கெனடி அவர்கள் மரணிக்கும் வரையில் கழகப் பணிகளைத் தொடர்ந்தவர்.

திருகோணமலையில் நேற்று முன்தினம் (07.09.2015) திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் படுகாயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த தோழர் கெனடி அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்றுகாலை (09.09.2015) உயிரிழந்துள்ளார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரது மனைவி, பிள்ளைகள், பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு, துயரத் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

தொடர்புகட்பு : 0771698146 (குமார்) 
                       0779235558 (சிவா)