சர்வதேச விசாரணை அவசியமில்லை-ருவன் விஜேவர்தன-

ruwanஇறுதிகட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு அவசியமில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய அமெரிக்காவும் இந்த நிலைப்பாடு தொடர்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றபோதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனஇந்த விடயத்தை கூறியுள்ளார். வெளிவிவகார பிரதியிமைச்சர் கலாநிதி ஷர்சடி சில்வா, பல்கலைக்கழக கல்வி ராஜாங்க அமைச்சர் மொகான் லால் கிரேரு ஆகியோரும் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விசாரணையை வலியுறுத்திய நடை பயணம் தொடர்கிறது-

sivajiசர்வதேச விசாரணையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில்நேற்று ஆரம்பமான நடை பயணம் இன்று பளையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. இன்றைய 2ஆம் நாள் பயணம் ஆணையிறவில் ஆரம்பமானது. சர்வதேச விசாரணையை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் இந்த பயணத்தில் வட மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முள்ளிவாய்க்காலில் தமது உறவுகளை இழந்தவர்களும், காணாமற்போனவர்களின் உறவினர்களும் இந்த நடைப் பயணத்தில் இணைந்துள்ளனர். கிளிநொச்சியில் நேற்றைய தினம் ஆரம்பமான இந்த நடை பயணம், யாழ். நல்லூரில் நிறைவு பெறவுள்ளது. இந்த பாதையாத்திரை கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் வரையில் ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளது.

நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவு-

americaஇனங்களிடையேயான நல்லிணக்கம் நோக்கிய இலங்கையின் முயற்சிகளுக்கு கொழும்பிலிலுள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்க அரசாங்கம் ஆகியவற்றின் ஆதரவு உண்டென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாப் தெரிவித்துள்ளார். கண்டி மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடியதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துதெரிவித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். தேரர்களுடன் சந்தித்துப் பேச்சு நடத்தியபோது இலங்கையின் கலாசாரம், பௌத்தம் பற்றி கூடுதலாக அறிந்து கொண்டேன். பௌத்த சமய அறிஞர்களுடன் நெருக்கமான உறவை வைத்திருக்க விரும்புகின்றேன். நல்லிணக்கம், ஒற்றுமைப்பட்ட ஜனநாயக, செழிப்பான, சுதந்திரமான சகலருக்குமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு, அமெரிக்கத் தூதரகமும், அமெரிக்காவும் உதவத் தயாராக இருக்கின்றன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

லும்பினிக்கான பயணத்தைத் தவிர்க்குமாறு ஆலோசனை-

lumbiniமறு அறிவித்தல் கிடைக்கும்வரை லும்பினிக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கையர்களிடம் நேபாலிலுள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியர்களின் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. லும்பினியில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த சுமார் 300 யாத்திரிகர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாகவும் இவர்கள் தற்போது இலங்கைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், லும்பினிக்கு செல்வதற்கான பயண ஆலோசனைக்கும், லும்பினி பகுதிக்கு பயணித்துக் கொண்டிருப்பவர்களுடன் தொடர்புகொள்வதற்கு 0097714720623, 0097714720213 போன்ற இலக்கங்களுடன் இணைப்பை ஏற்படுத்துமாறு இலங்கைத் தூதரகம் மேலும் அறிவித்துள்ளது.

சஷி வீரவன்ச குறித்த விசாரணை நிறைவு-

sashiசட்டவிரோதமாக விதிமுறை மீறி இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச தொடர்பான விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இது தொடர்பில் குற்றப் புலனாய்பு பிரிவினர் இன்று (கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். அதன்படி, விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும்வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வழக்கு விசாரணை அடுத்த வருடம் ஜனவரி 29ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.