மனித உரிமைகள் ஆணையாளருக்கு சிவாஜிலிங்கம் மின்னஞ்சல்-

sivajiஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் {ஹசேனுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 30வது அமர்வு இன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆரம்பமாகின்ற நிலையில், இந்த மாநாட்டில் ஊடாக தாங்கள் எதிர்பார்ப்பது என்ன? என்ற விபரங்களை உள்ளடக்கிய மனு ஒன்றே இவ்வாறு மின்னஞ்சல் அனுப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஒன்பது அம்ச கோரிக்கைகள் அடங்கிய அந்த மனுவின் பிரதிகள், இந்திய துணை தூதரகம் மற்றும் ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கும் கையளிக்கப்பட உள்ளதாகவும் எம்.கே. சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.