துணைவி பாடசாலை மணவர்கட்கு காலணிகள் வழங்கப்பட்டது.
வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்களால் பிரான்ஸ் நாட்டில் இருந்து இயங்கும் வு.சு.வு தழிழ் வானொலின் ஊடான புலம் பெயர் உறவுகளின் உதவியுடன் நடாத்தப்படும் ‘தாயக உறவுகளைத் தலை நிமிரச் செய்வோம்’
என்ற செயல் திட்டத்தின் கீழ் சுவிஸ் நாடடில் இருந்து திருமதி சந்திரமாலா அவர்கள் வழங்கிய உதவியின் பிரகாரம் வட்டுக்கோட்iடைப் பகுதியில் இயங்கிவரும் துணைவி அ.மி.த.க பாடசாலையில் உள்ள 30 பாடசாலை மாணவர்கட்கு பாடசாலைச் சப்பாத்துகள் வாங்கி வழங்கப்பட்டது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.PHOTOS⇒