பரந்தனில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் பகுதியில் அகழ்வு-

policeகிளிநொச்சி பரந்தன் பகுதியில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இன்று காலை 9.30 மணியளவில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த இடத்தில் பெருந்தொகையான ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கிளிநொச்சி பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதியால் அகழ்வு செய்;வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.