பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் சத்தியப்பிரமாணம்-

oathபாராளுமன்றத்தின் மூன்று உறுப்பினர்கள், இன்று சபாநாயகர் கரு ஜெயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். ஐ.தே.கட்சி பாலித்த தேவரபெரும, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிமல் ரத்நாயக்க ஆகியோரே இவ்வாறு சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தனது மகனின் இழப்பு காரணமாக புதிய பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்த அன்று பாலி;த தேவரப்பெருமவால் கலந்துகொள்ள இயலவில்லை. மேலும் மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான சரத் சந்திரமாயாதுன்ன இராஜினாமா செய்தார். இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பிமல் ரத்நாயக்க அக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் பொறுப்பேற்றார். அந்த வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினராக லக்ஷ்மன் செனவிரத்ன தெரிவு செய்யப்பட்டார். இவர்கள் மூவருமே இன்று புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.