விழிநீர் அஞ்சலிகள் – அமரர் சின்னத்தம்பி நாகமுத்து அவர்கள்

ammaயாழ். நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், பெரியதம்பனையை வசிப்பிடமாகவும், திருநாவற்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகமுத்து அவர்கள் நேற்று 25.09.2015 வெள்ளிக்கிழமை காலை இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த துயருடன் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

அன்னார் எமது கழகத்தின் மூத்த உறுப்பினரான விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு தியாகங்களைச் செய்த, தான் கொண்ட கொள்கைக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்த தோழர் பாரூக் (சி.கணேசலிங்கம்) அவர்களின் அன்புத் தாயாராவார்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்களோடு புளொட் அமைப்பினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

குறிப்பு: அன்னாரின் பூதவுடல் 179ஃ10, மூன்றாம் ஒழுங்கை திருநாவற்குளத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை (27.09.2015) முற்பகல் 11மணியளவில் பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனக் கிரியைகள் நடைபெறவுள்ளன.
தொடர்புகட்கு: 0771654136, 0775155393 (குடும்பத்தினர்)