Header image alt text

தமிழ் கூட்டமைப்பின் வரவேற்பு ஏகமனதாக விடுக்கப்படவில்லை-
பங்காளிக் கட்சிகள் அதிருப்தி-

maஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான சட்டங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமெரிக்க அனுசரணையிலான பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பளித்ததாக வெளிவந்த அறிவிப்பு ஏகமனதாக எடுக்கப்பட்டதல்ல என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தெரிவித்துள்ளன. அது ஒருமித்த கருத்தொன்று அல்ல எனக் குறிப்பிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியன தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

சர்வதேச விசாரணை ஒன்றை நாம் கோரிவந்த நிலையில் ஆகக் குறைந்தது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு நிகரானதாகக் கூட அமெரிக்கப் பிரேரணை அமையவில்லை என்பது கவலையளிக்கின்றது. இவ்வாறான நிலையில் அப்பிரேரணையை எவ்வாறு வரவேற்க முடியும் என்றும் அந்தக் கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன.

அமெரிக்கப் பிரேரணை மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிவிப்பு தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைமைக்குழு உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். அவர்களது கருத்துக்கள் வருமாறு, Read more

ஓரிருவர் எடுக்கும் முடிவுகளுக்கு எல்லோருமே கட்டுப்பட வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்-வடக்கு முதல்வர்-

vigneswaranஎன்னை பலரும் எதிர்ப்பு அரசியல்வாதியென வர்ணிப்பது நான் அறிவேன். நான் அரசியல்வாதியும் இல்லை, கட்சி சார்ந்தவனும் இல்லை, நீதித்துறையில் சில காலம்கழித்த பின்னர் ஆன்மீகத்துடனும், இலக்கியத்துடனும், சட்டத்துடனும், முழ்கியிருந்த என்னை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து தேர்தலில் போட்டியிட வைத்தார்கள். இதனால் என்நிலை மாறியது என்று வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். நேற்று யாழ்.இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

நான் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றேன் பின்னர் எனது நிலை மாறியது. மக்களுக்கு சேவையாற்றும் வைராக்கியத்துடன் இருந்தேன். சில கட்சிகளில் ஒருவர் இருவர் எடுக்கும் முடிவுகளுக்கு எல்லோருமே கட்டுப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கின்றார்கள். அவர்களின் முடிவுகளில் குறையிருந்து எடுத்துக் காட்டினால் எதிர்ப்பு அரசியல்வாதி என்கிறார்கள். Read more

இணை அனுசரணை அறிவிப்பு பிரதமர் ரணிலின் இரட்டை சாணக்கிய வியூகத் திறன்-

_DSC0369ஐ.நா, அமெரிக்கா போன்ற சர்வதேச சமூகத்தையும் தமிழர் தம் அரசியற் தலைமையையும் ஒன்றாகவே இவ்விணைச் சொல்லில் கையாளும் சாணக்கியமாகும் — கலாநிதி நல்லையா குமரகுருபரன் –

ரணில் விக்ரமசிங்க இன்று சர்வதேச அழுத்தத்திலிருந்து ஸ்ரீலங்கா விடுதலை பெற்றுவிட்டது எனவும், இலங்கையை சர்வதேச விசாரணையிலிருந்து மீட்டெடுத்ததாகவும் கூறுகின்ற இந்த ஆளும் அரசின் சாணக்கிய வெற்றி முரசிற்கு ஈடாக தமிழ் தலைமை யுத்தகால இழப்புகள் சம்பந்தமாக தமது சாணக்கியத்தை எப்படி வெளிப்படுத்த போகின்றது ? எனும் கேள்வி எழுகின்றது என்பது தமிழ் தலைமையின் பலம் சார்ந்த முக்கியமான விடயம் எனவும் தமிழ் தேசிய பணிக் குழு பொதுச்செயலாளர், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கூட்டமைப்பு தலைவர் கலாநிதி குமரகுருபரன் தெரிவித்தார்

தாம் சாரந்தவர்களுக்கு ”பொறுப்புக்கூறல்”, என்பதுதான் இன்று வௌ;வேறு வகைகளில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், அதேபோல த தே கூ சார்பாக பேசவல்ல எம்,எ.சுமந்தரனுக்கும். இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கா விற்கும் இருக்கின்ற முக்கிய பங்காற்றுகை. Read more

பா. உ சரவணபவன் அவர்களால் விளையாட்டு நிகழ்வு ஆரம்பித்து வைப்பு-

P1090734 (1)கடந்த 26.09.2015 அன்று யாழ். சங்கானை நிச்சாமம் பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 58 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி நிகழ்த்தப்பட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளை பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்கள் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார். இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார். இவ் நிகழவில் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்கள் உரையாற்றும்போது எதி;வரும் காலங்களில் மேற்படி சரஸ்வதி சனசமூக நிலையத்தின் அபிவிருத்தியின் பொருட்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிற்கூடாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.
Read more

ஆட்கடத்தல் தொடர்பான கொள்கையில் மாற்றமில்லை-அவுஸ்திரேலியா-

australiaகடல் வழியாக முன்னெடுக்கப்படுகின்ற ஆட்கடத்தல் தொடர்பிலான தமது அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என கொழும்புக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் வலியுறுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் மெல்கம் டர்ன்புல், நாட்டின் எல்லைப் பாதுகாப்பு விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய படகு மூலம் சட்டவிரோதமாக வருவோரை தடுப்பதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயற்சிப்போர், கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கோ அல்லது பெப்புவா நியூகினியா மற்றும் நவுரு தீவுகளுக்கோ அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கும் எவரும் அவுஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள் எனவும் அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு மூலம் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமை மேம்படுத்தப்படும்-ஜனாதிபதி-

maithriபுதிய அரசியலமைப்பொன்றை அறிமுகப்படுத்தி நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் 70 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க்கிற்கு சென்றுள்ள ஜனாதிபதி, நியூயோர்க் பௌத்த விகாரையில் கூடியிருந்த இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக புதிய அரசாங்கத்திற்கு சர்வதேச சமூகம் பரியளவில் ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மக்கள் தமக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை மக்களின் நன்மைகருதி உரிய முறையில் பயன்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்பெயின் இரண்டாக பிரிகின்றது-

spainஸ்பெயின் நாட்டின் வடகிழக்கு மாகாணமான கடலோனியாயில் மொத்தமாக 75 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் ஸ்பெயினில் இருந்து சுதந்திரம் பெற்று தனிநாடு ஆக செயல்பட விருப்பம் தெரிவித்து வந்தனர். இதனால் அங்கு பல கட்டப் போராட்டங்கள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து அங்கு வாழும் மக்களிடம் கருத்துக் கணிப்பு நேற்று நடத்தப்பட்டது. அந்த கருத்துக்கணிப்பில், ஸ்பெயினிலிருந்து பிரிவதற்கு ஆதரவாக அதிகளவான வாக்குகள் கிடைக்கபபெற்றுள்ளன. அதை தொடர்ந்து கருத்துக் கணிப்பில் பிரிவினைவாதிகள் வெற்றிபெற்றதாக அப்பகுதி ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ள அர்தர்மாஸ் கூறியுள்ளார். மேலும் 2017ம் ஆண்டு முதல் கடலோனியா பகுதி சுதந்திர நாடாக பிரகனடம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதனால் ஸ்பெயின் இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஐரோப்பா கண்டத்தில் கடலோனியா என்ற புதிய நாடு உருவாகிறது. இது ஸ்பெயினின் வளம் மிகுந்த பகுதி. தொழிற்சாலைகளும, வர்த்தக நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளன. இங்குள்ள பார்சிலோனாவில் ஸ்பெயினின் 2ஆவது பெரிய விமான நிலையமுள்ளது. அங்கு காணப்படும் துறைமுகம் 3ஆவது பெரிய துறைமுகமாகும்.

இலங்கை – இந்திய கூட்டு இராணுவ பயிற்சி-

indo sri lankaஇந்தியா-இலங்கைக்கு இடையேயான இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பயிற்சி யுக்திகளை பரிமாறிக் கொள்ளும் வகையிலும் இரு நாடுகளும் பங்கேற்கும் கூட்டு இராணுவ பயிற்சி நாளைமுதல் இரு வாரங்கள் நடைபெறவுள்ளது. புனேயில் உள்ள ஆந்த் இராணுவ முகாமில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் இரு நாட்டு இராணுவ அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். ‘பயிற்சி மித்ர சக்தி-2015’ என்று பெயரிடப்பட்ட இக்கூட்டு பயிற்சி, இரு நாடுகளுக்கும் இடையிலான 3-வது முகாம் ஆகும். இந்த பயிற்சி மூலம் இரு நாட்டு இராணுவத்தின் திறமை பெருகும், புரிதல் தன்மையும், மரியாதையும் அதிகரிக்கும் என்று இந்திய இராணுவத்துறை சார்பில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.சபை வழிகாட்டுதலின்படி தீவிரவாத ஒழிப்பு கூட்டு நடவடிக்கையாக நடைபெறும் இந்த பயிற்சி அடிப்படை உறுதி மற்றும் தன்னம்பிக்கை பெருகவும், எல்லையில் அமைதி, முன்னேற்றம், நிலைத்தன்மை அதிகரிக்கவும் வழிவகுக்கும் எனவும் கூறப்படுகிறது.

வவுனியாவில் சிறுவர்கள் ஆர்ப்பாட்டம்-

vavuniyaதமிழ் அரசியல் கைதிகளாக சிறைச்சாலைகளில் விசாரணைகளின்றியும், விடுதலையின்றியும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது தந்தைமார்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, வவுனியா செட்டிகுளத்தில் சிறுவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தமது தந்தையர்கள் விடுதலையின்றி சிறைச்சாலைகளில் வாடுவதனால், தமது வாழ்க்கையும் பள்ளிப்படிப்பும் அவர்களின் அரவணைப்பும், பாதுகாப்புமின்றி பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, அவர்களை விடுதலை செய்ய ஆவன செய்ய வேண்டும் என புதிய அரசாங்கத்திடம் அவர்கள் கோரியிருக்கின்றனர். மேலும் இவர்கள் நல்லாட்சியில் நல்வாழ்வு கிடைக்குமா? சிறுவர் நாமே?, அப்பாவின் நீண்ட சிறையால் வாழ்வை இழந்து தவிப்பது நாமே!, போன்ற சுலோக அட்டைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம் நடாத்தும், “வேரும் விழுதும் 2015” (கலைமாலை)..!!
verum.viluthum-002சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் தனது 18வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நிலத்தையும், புலத்தையும்  இணைத்துக் கொண்டாடி மகிழும்……
              “வேரும் விழுதும் 2015” (கலைமாலை)
 
காலம் : 25.10.2015 ஞாயிற்றுக்கிழமை பி.ப 14.00 மணி தொடக்கம்.. 
இடம் : Restaurant Baren sall, Bern str-25, 3072 Ostermundigen. 
                   நிகழ்ச்சிகள்.. 
இயல், இசை, நாட்டியம், இசைப்பாட்டு, தாளவாத்திய விருந்து, நகைச்சுவை விருந்து, சிறப்புப் பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி: “சுவிஸ் ராகம்” இசைக்குழுவின் கரோக்கி இசையில் பண்பட்ட பல கலைஞர்களின் “ராக கீதம்”, அதிரடி மேலைத்தேய நடனங்கள் (Hip Hop -ரி.யு.கே பாய்ஸ், ட்ரீம் பாய்ஸ் உட்பட பலரது..) போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள்…
**ஒன்றிய ஆண்டு விழா மலர் வெளியீடு..

Read more