Header image alt text

அமெரிக்க யோசனைக்கு ஆதரவளிப்பது காட்டிக்கொடுக்கும் செயல்-தினேஷ்-

dineshஜெனீவா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா முன்வைத்த யோசனைக்கு இலங்கை உடந்தையாக செயற்படுவது காட்டிக்கொடுக்கும் செயல் என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் இவ்வாறான காட்டிக்கொடுப்புகளை இதற்கு முன்னர் தாம் காணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, குறித்த செய்தியாளர் சந்திப்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். போர்க் காலத்தில் மனிதவுரிமைகள் மீறப்பட்டிருந்தால் அதற்கு உள்நாட்டு நீதி கட்டமைப்பின் அடிப்படையிலேயே தீர்வை காண முடியும் என விமல் வீரவன்ச இதன்போது தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறும்-பிரதமர்-

ranilஎதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் கட்டாயமாக மார்ச் மாதமளவில் நடத்தப்படும். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவதற்கு எந்வொரு காரணமும் இல்லை. நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் கைகோர்த்துள்ளன. பிரதான கட்சிகள் கைகோர்த்துள்ளதால் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை ஒத்திவைப்பதாக கருத முடியாது. உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இத் தேர்தலில் தேசிய அரசாங்கத்தில் கைக்கோர்த்துள்ள கட்சிகள் இரண்டும் தனித்தனியே போட்டியிடும் என அவர் மேலும் கூறினார். பிரதமரின் கருத்துக்கு இரண்டு பிரதான கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.

வெளிநாட்டு நீதிபதிகள், இலங்கையின் சட்டத்தின்கீழ் செயற்படவேண்டும்-

ranil (5)இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யும் நீதிமன்றத்தில், வெளிநாட்டு நீதிபதிகளோ நிபுணர்களோ பங்கேற்பார்களாயின், அவர்கள் இலங்கை சட்டத்தின் பிரகாரமே செயற்படவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு பங்கேற்கும் நீதிபதிகள் மற்றும் நிபுணர்களுக்கு, இலங்கை நாடாளுமன்றத்தின் மூலமாகவே அனுமதி வழங்கப்படும் என்றும் இது, இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரமே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு ஹைட்பார்க்கிலுள்ள சீரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தைநேற்று பொதுமக்களிடம் கையளித்து, அங்கு அமைக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடத்தை திறந்து வைத்து, உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால பரக் ஒபாமா சந்திப்பு-

maithri obamaஅமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் 70ம் அமர்வுகளில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் உலகத்தலைவர்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையகத்தில் நேற்று விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இந்த விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்துபசாரத்திற்கு இடைநடுவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பரக் ஒபாமாவை சந்தித்து கைலாகு செய்து சொற்ப நேரம் பேசியுள்ளார்.

வவுனியா வர்த்தக நிலையத்தில் கொள்ளை-

robbery (4)வவுனியா சூசைப்பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள செல்வம் மோட்டோர்ஸ் வர்த்தக நிலையத்தில் நேற்று இரவு கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்றுகாலை 08.00 மணிக்கு வர்த்தக நிலையத்தை திறப்பதற்கு வந்தபோது எனது கடையின் 08 பூட்டுக்களும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது தொடர்பாக பொலிஸிற்கு தகவலை வழங்கியதை அடுத்து அவர்களின் உதவியுடன் 700,000 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டதை அறியக் கூடியதாக இருந்தது வர்த்தக நிலைய உரிமையாளர் கிருபாகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றப்புலனாய்வு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஊடகவியலாளர் பிரகீத் வழக்கு, மனுவை விசாரிக்க அனுமதி-

prageeth ekneligodaஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில், காவலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் நால்வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில், லுதினர் கர்ணல் சிறிவர்த்தன, கோப்ரல் அனுர ஜெயலால் உள்ளிட்ட நான்கு இராணுவ வீரர்கள் இரகசியப் பொலிஸாரால் நியாயமான காரணம் இன்றி காவலில் வைக்கப்பட்டுள்ளதாக, மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விடயங்களை ஆராய்ந்த மேன் முறையீட்டு நீதிமன்றம் மனுவை விசாரிக்க அனுமதி வழங்கியது. அத்துடன் எதிர்வரும் 9ம் திகதி இது குறித்து தகவல் அளிக்குமாறு இரகசியப் பொலிஸாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலுவான சர்வதேச பங்கை உறுதி செய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்-

rtrஇலங்கையின் உள்நாட்டு போரில் நிகழ்த்தப்பட்ட ஈவிரக்கமற்ற துஷ்பிரயோகங்களுக்கு நீதி வழங்குவதற்கான பொறிமுறையில், சர்வதேசத்தின் வலுவான பங்கை உறுதி செய்யும் தீர்மானமொன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நிறைவேற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது. இலங்கை அரசாங்கம் செயற்படவேண்டிய தருணம் வந்துவிட்டதை தற்போது சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் புலப்படுத்துகின்றது என, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனீவாவுக்கான பணிப்பாளர் ஜோன் பிசர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச பங்களிப்புடனான நீதிபொறிமுறையை தீர்மானம் அங்கீகரித்துள்ளதன் மூலம் நீதி வழங்குவதற்கு சர்வதேச பங்களிப்பு அவசியம் என்ற முக்கியமான விடயத்தை அது ஏற்றுக்கொண்டுள்ளது. இலங்கையின் புதிய அரசாங்கம் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதுடன், இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியமான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றது. Read more