அமெரிக்க யோசனைக்கு ஆதரவளிப்பது காட்டிக்கொடுக்கும் செயல்-தினேஷ்-

dineshஜெனீவா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா முன்வைத்த யோசனைக்கு இலங்கை உடந்தையாக செயற்படுவது காட்டிக்கொடுக்கும் செயல் என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் இவ்வாறான காட்டிக்கொடுப்புகளை இதற்கு முன்னர் தாம் காணவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, குறித்த செய்தியாளர் சந்திப்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச, கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். போர்க் காலத்தில் மனிதவுரிமைகள் மீறப்பட்டிருந்தால் அதற்கு உள்நாட்டு நீதி கட்டமைப்பின் அடிப்படையிலேயே தீர்வை காண முடியும் என விமல் வீரவன்ச இதன்போது தெரிவித்துள்ளார்.