தென்கிழக்கு பல்கலைக மாணவர்களுக்கு விளக்கமறியல்-

dffdfdfdfதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை மற்றும் சட்டவிரோதமான முறையில் கூட்டம் நடத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 13 மாணவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதிவான் நீதிமன்ற நீதவானுமான எச்.எம் முகம்மது பஸீல் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தியபோதே அவர்களை, எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.தென்கிழக்குப் பல்கலைக்கழக இரண்டாம் வருட மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் விடுதி வசதி ஏற்படுத்தி தருமாறு கோரி கடந்த 1ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது பல்கலைக்கழத்தின் சொத்துக்களுக்கு மாணவர்களினால் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தெரிவித்தார். இதையடுத்து, அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பேரிலேயே மேற்குறித்த குற்றச்சாட்டுக்களின் பேரில் 13 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.