தேர்தல் ஆணையாளர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பு-

election.....அசா­தா­ரண சூழல் கார­ண­மாக வட­கி­ழக்­கி­லி­ருந்து வெளி­யேறி நாட்டின் ஏனைய பாகங்களிலும் தமிழ் நாட்­டிலும் வசிக்கும் அக­தி­களை பதி­வு­செய்­யு­மாறு தேர்­தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்­பி­ரி­ய­விடம் சிறு­பான்மைக் கட்­சி­களின் பிர­தி­நி­திகள் குழு வலியுறுத்­தி­யுள்­ளன. நேற்­றைய தினம் வட­கி­ழக்கைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சிறுபான்மைக் கட்­சி­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் தேர்­தல்கள் ஆணை­யாளர் மகிந்த தேசப்­பி­ரி­ய­விற்­கு­மி­டையில் சந்திப் பொன்று இரா­ஜ­கி­ரி­யவில் உள்ள தேர்தல் திணைக்களத்தில் இடம்பெற்­றது. இச்சந்­திப்­பின் போதே மேற்­கண்­ட­வாறு வலி­யு­றுத்தப்­பட்­ டுள்­ளது. வடகிழக்கைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சிறு­பான்மைக் கட்­சி­க­ளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் த.சித்­தார்த்தன் எம்.பி.யும் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சார்­பாக அதன் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ­ஹக்கீம், கிழக்கு மாகாண முத­ல­மைச்­சரும் அக்­கட்­சியின் பிர­தித் ­த­லை­வ­ரு­மான ஹாபீஸ் நஸீர் அஹமட், செய­லாளர் ஹசன் அலி, ஈழ­மக்கள் ஜன­நா­யகக் கட்­சியின் செய­லாளர் நாய­கமும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கே. எம்.டக்ளஸ் தேவா­னந்தா, அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான றிசாட் பதி­யுதீன் ஆகியோர் குறித்த சந்­திப்பில் பங்­கு­பற்­றி­யி­ருந்­தனர். இச் சந்­திப்புக் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

வடகி­ழக்­கி­லி­ருந்து வெளியேறி நாட்டின் பல பாகங்­க­ளிலும் வசிக் கும் மக்­களை வாக்­காளர் இடாப்பில் ஏதேனும் ஒரு பிர­தே­சத்தில் உள்­வாங்­கப்­ப­ட­வேண்டும் என ஏகோ­பித்த குரலில் வலி­யு­றுத்­தப்­பட்­டது. அதனைத் தொடர்ந்து வடக்­கி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்டு நீண்­ட­கா­ல­மாக புத்­தளம், சிலாபம் போன்ற பகு­தி­களில் வாழ்ந்து வரும் முஸ்­லிம்கள் அனை­வரும் சொந்த இடங்­களில் குடி­யேற்­றப்­பட்டு வாக் ­காளர் இடாப்பில் இணைத்துக்கொள் ­ளப்­பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான றிசாட் பதி­யுதீன் கோரினார்.அத்­துடன் பல்­வேறு தேவை­க­ளுக்­காக நாட்டின் பல பாகங்­க­ளிலும் தமது சொந்த இடங்­க­ளி­லி­ருந்தும் வெளி­யேறி முஸ்­லிம்­மக்கள் வாழ்ந்து வரு­கின்­றனர். அவர்கள் ஏதோ­வொரு வகையில் வாக்­காளர் இடாப்பில் உள்­வாங்­கப்­ப­ட­வேண்டும் எனவும் குறிப்­பிட்டார்.  அதே­நேரம் புத்­தளம், சிலாபம் போன்ற பகு­தி­களில் இடம்­பெ­யர்ந்­துள்ள வடக்கு முஸ்­லிம்கள் வாக்­காளர் இடாப்பில் பதி­வ­தற்கு வழங்­கப்­படும் கால எல்­லையை அதி­க­ரிக்­கு­மாறு கோரினார். இத­னை­ய­டுத்து சிறி­லங்கா முஸ் லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்சரு­மான ரவூப்­ஹக்கீம் இத ற்கு ஒப்­பான கருத்­தையே வலி­யு­றுத்­தினார். அதனைத் தொடர்ந்து தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் சார்பில் புளொட் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சித்­தார்த்தன் தெரி­விக்­கையில், அசா­தா­ரண சூழலின் கார­ண­மாக வட­கி­ழக்கு தாய­கங்­க­ளி­லி­ருந்து தமிழ் மக்கள் வெளி­யேறி நாட்டின் ஏனைய பாகங்­க­ளிலும் தமிழ் நாட்டு அகதி முகாம்­க­ளிலும் மற்றும் பல்­வேறு இடங்­க­ளிலும் வாழ்ந்து வரு­கின்­றனர். அவர்­களை வாக்­காளர் இடாப்பில் உள்­வாங்­கு­வதற்கு பொறி­முறை ஒன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். அத்­துடன் அவர்கள் வாக்­க­ளிப்­ப­தற்­கான ஏது­நி­லைகள் உட­ன­டி­யாகக் காணப்­ப­டாத போதிலும் ஆகக் குறைந்­தது மதிப்­பீட்டு ரீதி­யான பதி­வொன்­றா­வது காணப்­ப­டு­வதன் அவ­சி­யத்­தையும் சுட்­டிக்­காட்­டினார்.

இதன்­போது ஈழ­மக்கள் ஜன­நா­யகக் கட்­சியின் செய­லாளர் நாய­க மும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருமான டக்ளஸ் தேவா­னந்தா, குறித்த கரு த்தை ஆமோ­தித்து அதனை நடை­ மு­றைப்­ப­டுத்தும் வகையில் புதிய செயற்­பா­டுகள் முன்­னெடுக்கப்­பட­ வேண்­டி­யது அவ­சியம் எனவும் குறிப்­பிட்டார். இந்­நி­லையில் தமிழ்நாட்டில் வசிக்கும் மக்­களை வாக்­காளர் இடாப்பில் இணைத்­துக்­கொள்ளும் வகையில் நிலை­மை­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு சட்­ட­மூலம் ஒன்று உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது எனக்­கு­றிப்­பிட்ட தேர்­தல்கள் ஆணை­யாளர் இவ்­வி­டயம் தொடர்­பாக அதீத கவனம் எடுத்து ஜனா­தி­ப­தி­யிடம் பேச­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார். அத்­துடன் குறித்த விடயம் தொடர்­பாக சிறு­பான்மை தரப்­பி­ன­ரா­கிய நீங்­களும் ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்குக் கொண்டு செல்லும் வகையில் எழுத்­து­மூ­ல­மான கோரிக்­கை­களை முன்­வைக்­கு­மாறு வலி­யு­றுத்­தி­யுள்ளார்.