அலம்பில் சென்ற் அன்ரனீஸ் சனசமூக நிலையத் திறப்பு விழா-(படங்கள் இணைப்பு) 

photo 3 (1)முல்லைத்தீவு அலம்பில் சென்ற் அன்ரனீஸ்  சனசமூக நிலையத் திறப்பு விழா நேற்று (15.10.2015) வியாழக்கிழமை மாலை 4.00மணியளவில் நடைபெற்றது. மேற்படி சனசமூக நிலையத்தின் ஒரு பகுதி கட்டிடத்திற்கான நிதியானது மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்களின் பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியிலிருந்து கொடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டிடத்தினை மாகாணசபை உறுப்பினர்கள் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) திரு. அன்ரனி ஜெகநாதன் ஆகியோர் திறந்து வைத்தார்கள். மேற்படி நிகழ்விலே பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்கள் திரு. கந்தையா சிவநேசன் (பவன்), திரு. அன்ரனி ஜெகநாதன், அலம்பில் பகுதி பங்குத்தந்தை, உள்ளுராட்சி உதவி ஆணையாளர், அலம்பில் பாடசாலையின் அதிபர் ஆகியோரும், சென்ற் அந்தனிஸ் சனசமூக நிலையத்தின் தலைவர், அதன் செயலாளர் மற்றும் சனசமூக நிலைய உறுப்பினர்கள் மற்றும் ஊர்ப் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
aaaaaaaaa photo 3 photo 3 (1)