அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்-(படங்கள் இணைப்பு)
பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வவுனியா நகர சபை மைதானத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவசக்தி ஆனந்தன்,, டொக்டர் சிவமோகன் வட மாகாண சபை சுகாதார அமைச்சர் டொக்டர் சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. கந்தையா சிவநேசன் (பவன்), திரு. ஜி.ரி லிங்கநாதன், திரு. தியாகராஜா, திரு. நடராஜா, வவுனியா நகரசபையின் முன்னாள் உப தலைவர் திரு. க.சந்திரகுலசிங்கம், பிரஜைகள் குழுவின் தலைவர், கிராம சேவையாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.