Header image alt text

தர்மத்தின் நிழலாய் வாழ்ந்த ஈழத்தின் கருமவீரன்

– இந்திரன் –

devid aiya avarkalவிடிவுக்காக தியாகம் புரிந்தவர்களை எடையிடும்போது உயிர்நீத்த மாவீரர்களையே அளவுகோலாக கொள்வது வழமை. வார்த்தையில் சொல்லிவிட முடியாத அளப்பெரிய அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட தமிழ் இளைஞர்களின் போராட்டத்தின் ஆரம்பகாலம் என்பது தமிழ் மக்கள் மத்தியில் அல்லாமல் உலக அரங்கிலேயே புரட்சிக்கான இலக்கணங்களை வகுத்தது. அவ்வாறான தகுதியை மிதவாத அரசியல் சிந்தனை கொண்ட தேசப்பற்றாளர்களுக்கோ அரசியல்வாதிகளுக்கோ தமிழ்மக்கள் அவ்வளவு இலகுவில் வழங்க விரும்பியதில்லை. என்னதான் தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் என்று தேசத்துக்காக உயிரையே மாய்த்தாலும் மிதவாதிகளின் கொள்கைகள் எனப்படுவது அவர்களுக்கு சேரவேண்டிய பெருமைக்கு பெரும் தடைக்கல்லாக இருந்துவந்தமை தமிழரசியல் பரப்பில் பாரம்பரியமாக இருந்து வந்துள்ளது.

இந்த பாரம்பரிய மரபை உடைத்தெறிந்த கர்ம வீரர்களில் முக்கியமானவர்தான் டேவிட் ஐயா.

அவரது வாழ்வும் இயக்கமும் மரணமும் இன்று புராணங்கள் போல நினைவுகூரப்பட்டாலும் தமிழ்மக்களின் விடிவு என்ற விடயத்தில் அவர் கொண்ட கொள்கையும் அதற்காக அவர் வகுத்த விடுதலைப் பாதையும் இன்றும்கூட பின்பற்றக்கூடியதாக நம் முன் விரிந்து கிடப்பதுதான் ஆச்சரியம். டேவிட் ஐயாவை இலங்கையில் காந்திய அமைப்பை தோற்றுவித்த கர்த்தாவாக உருவகிப்பதன் மூலம் அவரை அஹிம்சையின் வடிவம் கொண்டவராக உருவகித்துக் கொள்வதில் பலர் முனைப்படையலாம். அவரை ஈழத்து காந்தி என்று அழையாத குறையாக அவரது கொள்கைகளை அமைதியின் உச்சமாக பதிவு செய்ய முயலலாம். Read more

டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவருடைய செய்தியா?.
-நிலாந்தன்-

devid aiyaதனது பல தசாப்த கால அலைந்த வாழ்வின் முடிவில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன் நாடு திரும்பிய டேவிட் ஐயா கடந்த வாரம் கிளிநொச்சியில் அமைதியாக இறந்து போனார். ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின் எல்லையோரக் கிராமங்களில் மைல் கணக்காக நடந்த கால்கள் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் தமது பயணத்தை முடித்துக் கொண்டன. ஒரு செயற்பாட்டாளராக, கைதியாக, நாடு கடந்து வாழ்பவராக முதிய வயதிலும் தேடப்படும் ஒருவராக ஆறுதலின்றி சதா அலைந்த ஒரு பெருவாழ்வு கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் அதிகம்பேருடைய கவனத்தை ஈர்க்காமல் அமைதியாக முடிந்து போயிற்று. அவருடைய இறுதி நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. அது அண்மைத் தசாப்தங்களில் அங்கு நடந்த இறுதி நிகழ்வுகள் எல்லாவற்றிலிருந்தும்; வேறுபட்டுக் காணப்பட்டது. கட்சி ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் வேறுபட்டு நிற்கும் எல்லாத் தரப்புக்களும்; பங்குபற்றிய ஓர் இறுதி நிகழ்வு அது. எல்லாக் கட்சிக்காரர்களும், செயற்பாட்டாளர்களும் அந்த நிகழ்வில் போற்றிப் பேசுவதற்கு ஏதோ ஒன்று டேவிட் ஐயாவின் வாழ்க்கை முழுவதிலும் இருந்திருக்கிறது. பெருமளவில் அரசியல் பிரமுகர்களும் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்ட அந்நிகழ்வில் மிகக்குறைந்தளவு பொது ஜனங்களே பங்குபற்றியிருக்கிறார்கள். இந்நிகழ்வு நடந்து இரண்டு நாட்களின் பின் நடந்த மற்றொரு இறுதி நிகழ்வில் ஒப்பீட்டளவில் கூடுதலான பொதுமக்கள் பங்குபற்றியிருக்கிறார்கள். அதுவும் ஒரு செயற்பாட்டாளரின் இறுதிக் நிகழ்வுதான். தமிழ் ஐயா என்று அழைக்கப்படும் கிளிநொச்சியை மையமாகக் கொண்டு இயங்கிய ஒரு செயற்பாட்டாளரின் இறுதி நிகழ்வு அது. அவர் அந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதால் அதில் பொதுமக்கள் கூடுதலாகக் கலந்துகொண்டார்கள். ஆனால் டேவிட் ஐயா கிளிநொச்சியில் வசித்திருக்கிறார் என்பது அவர் இறந்தபொழுதே பலருக்கும் தெரியவந்தது.  Read more