Header image alt text

கொக்குத்தொடுவாயில் 100 பேருக்கு விதைபொருட்கள் வழங்கிவைப்பு-(படங்கள் இணைப்பு) 

IMG_2220முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாயில் அமைந்துள்ள தானிய களஞ்சிய நிலையத்தில் நேற்றுக்காலை 10மணியளவில் 100பேருக்கு உள்ளீடுகைக்கான விதைபொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வட மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களின் அமைச்சின் ஊடாக இவை வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவர்களது தலைமையில் நடைபெறவிருந்தநிலையில் அவர் இங்கு சமூகமளிக்க முடியாமற்போனமை காரணமாக வட மாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. கந்தையா சிவநேசன்(பவன்) திரு. ரவிகரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது உளுந்து பயறு மற்றும் நிலக்கடலை என்பவற்றுக்கான விதைபொருட்கள் 100 பேருக்கு வழங்கிவைக்கப்பட்டன.
Read more

கராத்தே சம்பியன் கொலை தொடர்பில் சந்தேகநபரின் சகோதரன் கைது-

444 (2)அநுராதபுரம், முதித்தா மாவத்தையில் உள்ள பிரபல்யமான இரவு விடுதியொன்றின் உரிமையாளரும் கராத்தே சம்பியனுமான வசந்த சொய்சாவின் படுகொலை, தொடர்பில் பிரதான சந்தேகநபரின் சகோதரரை தங்காலையில் வைத்துக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்;. சிலருக்கு காயங்களை ஏற்படுத்தியமை மற்றும் சொத்துக்களுக்கு சேதங்களை விளைவித்தமை என்பன தொடர்பில் இதுவரையிலும் 22பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஐகதான இருவரை தவிர, ஏனையோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் முன்னாள் இராணுவ வீரரான அநுராதபுரம் அஹயியாகமவைச் சேர்ந்த ஆர்.ஏ.இனோன் ரணசிங்க என்பவரை வெளிநாட்டுக்கு செல்வதற்கு இடமளிக்கவேண்டாம் என்றும் அவரது கடவுச்சீட்டை முடக்குமாறும் அநுராதபுரம் பிரதான நீதவான் ஷாந்த கலன்சூரிய, குடிவரவு மற்றும் குடியகல்வு நிர்வாகிக்கு வியாழக்கிழமை தடையுத்தரவு பிறப்பித்தார். பிரபல்யமான இந்த இரவு விடுதிக்குள் 24ஆம் திகதி இரவு 11.45க்கு நுழைந்த இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்களால் அதன் உரிமையாளரான கராத்தே சம்பியன் வசந்த சொய்சா பலியானார். சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 22பேர் இதுவரையிலும் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

வட்டு மத்திய கல்லூரி மாணவி வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் கௌரவிப்பு-

4வட்டு மத்திய கல்லூரி மாணவியும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க வீராங்கனையுமான செல்வி. மகேந்திரன் கமலினி தேசிய மட்ட போட்டியில் வெற்றி பெற்றமைக்காக கௌரவிக்கப்பட்டார். மேற்படி வீராங்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த 26.10.2015 அன்று வட்டு இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் சங்க முன்னால் தலைவரும் அராலி சரஸ்வதி மாகா வித்தியாலய அதிபருமாகிய திரு. நா.சபாரட்ணசிங்கி தவைமையில் நடைபெற்றது. அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட போட்டியில் கோலூன்றி பாய்தலில் கலந்து கொண்டு 3ம் இடத்தினை பெற்றுக்கொண்டதோடு வட்டு மத்திய கல்லூரி வரலாற்றில் முதற்தடவையாக தேசிய மட்ட போட்டியில் வெற்றி பெற்றமைக்காகவும் அவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவ் வீராங்கனைக்கு பொன்னாடையினை வலிமேற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் திருமதி. ஜங்கரன் நாகரஞ்சினியும் நாடாளமன்ற உறுப்பினர்களான கௌரவ சுமத்திரன் கௌரவ சரவணபவன் ஆகியோர் வெற்றிக்கிண்ணம் வழங்கி கௌரவித்தனர். மேற்படி மாணவி கௌரவிப்பு நிகழ்வில் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்களுடன், மாகாணசபை உறுப்பினர்களான திரு.ஆனோல்ட் திரு.சயந்தன் திரு.சுகிர்தன் திரு.அஸ்வின் ஆகியோரும் வலிமேற்கு பிரதேச சபை முன்னால் தலைவரும் பங்கேற்றிருந்தனர். Read more

பருத்தித்துறை பொலிஸ் நிலைய புதிய கட்டடம் திறந்துவைப்பு-

point pedro police (1)யாழ். பருத்தித்துறையில் 176 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட பருத்தித்துறை பொலிஸ் நிலையம், சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பனவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் பொலிஸ் நிலைய கட்டடம் அழிவடைந்த பின்னர் பொலிஸ் நிலையம் தனியார் கட்டடத்தில் இயங்கி வந்தது. தற்போது சகல வசதிகளையும் உள்ளடக்கிய புதிய கட்டடம் 5 எஸ் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், சிறுவர் மற்றும் மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம். ஏசுமந்திரன், த. சித்தார்த்தன், ஈ. சரவணபவன், மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பாராளுமன்ற உறுப்பினர், கே.என். டக்ளஸ் தேவானந்தா, பொலிஸ் மா அதிபர் எம்.கே. இலங்ககோன், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன், பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா, மற்றும் அமைச்சின் செயலாளர்கள், முப்படைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்திலிருந்து விருந்தினர்கள் கண்டிய நடனத்துடன் அழைத்துவரப்பட்டு பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. தொடர்ந்து நினைவுக்கல்லை திரைநீக்கம் செய்து வைத்த அமைச்சர், பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்தார். பொலிஸ் நிலையம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், பொலிஸார் தங்குமிட விடுதி, ஆவண காப்பகம் போன்ற வசதிகளை உள்ளடக்கி இக்கட்டட தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.
Read more

ரஷ்ய விமானம் எகிப்தில் விழுந்து நொருங்கியது-

russian flightசெங்கடல் பகுதியிலுள்ள ஷார்ம் எல் ஷெய்க்கிலிருந்து ரஷ்யாவின் பீட்டர்ஸ் பேர்க்குக்கு சென்று கொண்டிருந்த ரஷ்ய விமானமான ஏ 321, எகிப்தின் மத்திய சினாய் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதை எகிப்து பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார். 217 பயணிகள் மற்றும் 7 விமனப் பணியாளர்களுடன் சென்ற இந்த விமானம், சைப்பிரஸ் பகுதியில் காணமற்போனதாக அறிவிக்கப்பட்டு, சில மணிநேரங்களிலேயே மேற்கண்ட தகவலை எகிப்து பிரதமர் தெரிவித்துள்ளார். விமானத்தில் பயணித்தவர்களில் அதிகமானோர் ரஷ்யர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. எகிப்தின் ஷாம் எல் ஷேக் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சேர்த்து 224 பேருடன் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரத்திற்கு குறித்த பயணிகள் விமானம் சென்றுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் ரேடார் உடனான துண்டிப்பை இழந்துள்ளது. பின் சினாய் பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்துள்ளமை தெரியவந்தது. விபத்து குறித்து மேலும் விபரங்களை சேகரிப்பதற்காக எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில், அமைச்சரவை குழு ஒன்றை அமைத்துள்ளார் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

மட்டக்களப்பு சிறைக்கைதிகளின் போராட்டம் நிறைவு-

jalமட்டக்களப்பு சிறையில் உள்ள கைதிகள் சிலர் நேற்றையதினம் சிறைச்சாலையின் கூரை மீதேறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தங்களுக்கான வசதிகளை மேம்படுத்தக் கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களை மட்டக்களப்பு மாவட்ட நீதிபதிகள் சந்தித்து, குறைகளை கேட்டு நிறைவேற்ற ஒழுங்கு செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 8 கைதிகள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் அவர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ். வியாழேந்திரன், நீதிபதிகளுடன் பேசி, எதிர்வரும் திங்கட்கிழமை இரண்டு தரப்புக்கும் இடையில் சந்திப்பை ஏற்படுத்த ஒழுங்கு செய்தார். இதனை அடுத்து அவர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம், சுமார் 80 குடும்பங்கள் இடம்பெயர்வு-

landslideமண்சரிவு எச்சரிக்கை அபாயம் காரணமாக அம்பேவல வோர்விக் தோட்டத்திலுள்ள சுமார் 80 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். வோர்விக் தோட்டத்தில் நிலவும் அபாய நிலைமை காரணமாகவே இந்த குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவி பணிப்பாளர் ஈ.எல்.எம். உதயகுமார தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் குறித்த பகுதியில் சீரற்ற வானிலை நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வோர்விக் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.