30 இலட்சம் பேருக்கு உறுதிபத்திரங்கள்-பிரதமர்-

ranil10 வருடங்கள் அரச உரிமை வீடுகளில் வசிக்கும் 30 லட்சம் பேருக்கு அவற்றின் நிரந்தர உறுதித்பத்திரம் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் இடைக்கால கொள்கை பிரகடன விஷேட உரையை இன்று நாடாளுமன்றில் நிகழ்த்திய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை இணைத்து தேசிய ஓய்வூதிய நலன்புரி நிதியம் ஒன்று உருவாக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். இதனிடையே, நூல்கள் மற்றும் விளையாட்டு பொருட்களுக்காக விதிக்கப்பட்டிருந்த வரிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம்-

maithriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா எதிர்வரும் 13ஆம் திகதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார். மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத்தொகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கட்டடத்தையும் நவீன கேட்போர் கூடத்தையும் திறந்துவைப்பதற்காக, மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் அழைப்பின் பெயரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் மட்டக்களப்புக்கு சமூகமளிக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் சட்டத்தரணி வி.வினோபா இந்திரன் தெரிவித்தார் இந்நிகழ்வு எதிர்வரும் 13ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதீப் மாஸ்டர் உட்பட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு-

prasanthanதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையுடன் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் அமைப்பாளர் பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ஆகியோர் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் அவர்களை எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் மாலைதீவில் கைது-

arrestஇலங்கை இராணுவத்தில் இருந்த ஸ்னைப்பர் வீரர் ஒருவர் மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டு வரலாற்றில் பாரியளவில் ஆயுதங்கள் மீட்கப்பட்டு சில தினங்களில் இவர் கைதாகியுள்ளார் என, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹபீஹாட்டு தீவிலிருந்து இவ்ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. எது எவ்வாறு இருப்பினும் மாலைதீவு அதிகாரிகள் இவர் கைதுசெய்யப்பட்டதை உறுதி செய்யவோ மறுக்கவோ இல்லையென தெரியவருகிறது.