முத்தையன்கட்டு பாடசாலையில் தங்கியுள்ள மக்களை நேரில் பார்வையிட்ட மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் (பவன்)-(படங்கள் இணைப்பு)

muthaiyankattujhதொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாடசாலையில் தங்கியிருக்கும் முல்லைத்தீவு மாவட்ட முத்தையன்கட்டு இடதுகரைப் பிரதேச மக்களை வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு பிரச்சினைகளைக் கேட்டறிந்ததுடன், அவர்களுக்குத் தேவையான உணவு, உலருணவு உள்ளிட்ட உதவிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். வெள்ளத்தினால் முத்தையன்கட்டு இடதுகரைப் பிரதேசத்தில் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் 65 குடும்பங்கள் இடம்பெயர்ந்து பிரதேச பாடசாலையில் தங்கியிருக்கின்றனர். இவர்களுக்கான உணவு, உலருணவு நிவாரணங்கள் வழங்குவது பற்றி மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) ஆராய்ந்ததுடன் அவர்களுக்கான உதவிகளுக்காக சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் முதலமைச்சருக்கு அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

muthaiyankattujh muthaiyankattuhnh muthaiyankattuhgh muthaiyankattuggf