வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சரசாலை தெற்கு மக்களுக்கு உணவு வழங்கிவைப்பு-(படங்கள் இணைப்பு)
கன மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு யாழ். சரசாலை வித்தியாலயத்தில் தங்கியிருக்கும் சரசாலை தெற்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களுக்கு சரசாலை இளைஞர்களும் கழக ஆதரவாளர்களும் இணைந்து உதவியுள்ளனர். இதன்படி சரசாலை தெற்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 33 குடும்பங்களைச் சேர்ந்த 104 பேருக்கு அவர்கள் இன்று (17.11.2015) காலையுணவும், மதிய உணவும் சமைத்து வழங்கியுள்ளனர். இதற்கான நிதியுதவியினை சுவிற்சலாந்தில் வசிக்கும் சாவகச்சேரி கல்வயல் பகுதியைச் சேர்ந்த வேதாரணியம் பிரபாகரன் அவர்கள் வழங்கியிருந்தார்.