சித்திரவதை முகாமுடன் தொடர்புடைய பெயர்கள் தம்மிடமிருப்பதாக யாஸ்மின் சூக்கா தெரிவிப்பு-

jasmni xookaதிருகோணமலையில் இருப்பதாக கூறப்படும் இரகசிய சித்திரவதை முகாமுடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த விபரங்கள் தங்களிடம் இருப்பதாக, மனித உரிமைகள் செயற்பாட்டாளர் யாஸ்மின் கள் சூக்காவின் தலைமையிலான தன்னார்வ குழு ஒன்று தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இயங்கும் இலங்கையின் நீதி மற்றும் உண்மைக்கான வேலைத்திட்டம் என்ற இந்த அமைப்பு இதனைக் கூறியுள்ளது. குறித்த அதிகாரிகளே கைதுசெய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களை இந்த சித்திரவதை முகாமிற்கு மாற்றியதாகவும் கூறப்பட்டுள்ளது. திருமலையில் செயற்பட்டு வந்த குறித்த முகாம் தொடர்பில், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு தகவல் வெளியிட்டிருந்தது. இம் முகாமில் பலர் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர்கள் தங்களின் ரத்தத்தினால் முகாமின் சுவரில் எழுதி வைத்திருப்பதாகவும் குறித்த செயற்குழு கூறியிருந்தது. இது தொடர்பான விசாரணைகளின் நிமித்தம் கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் மூவர்; கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமந்தா பவர் அரச உயர்மட்ட பிரதிநிதிகளுடன் சந்திப்பு-

ertrtஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளார். மேலும் இவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்தியாவுக்கான விஜயத்தை நிறைவு செய்தபின் நேற்றுமாலை சமந்தா பவர் உள்ளிட்ட குழுவினர் இலங்கையை வந்தடைந்தனர். இதேவேளை இவர்கள் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றையும் மேற்கொண்டு வடமாகாண ஆளுநர் எச்.எம்.பள்ளியக்காரவை ஆளுநர் அலுவலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற சந்திப்பில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் வடமாகாண ஆளுநர் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் அவர் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அதிசக்திவாய்ந்த வெடிபொருட்களுடன் ஒருவர் கைது-

arrestஅதிசக்தி வாய்ந்த வெடிபொருட்களுடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றில் பயணித்தவரை, எல்ல-வெல்லவாய வீதி, ராவனா எல்ல பகுதியில் வைத்து பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர். பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்தவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். மேற்படி நபரிடமிருந்து வோடர் ஜெல் ரகத்தைச் சேர்ந்த அதிசக்திவாய்ந்த 700 கிராம் வெடிமருந்து, ஜெலிட்னைட் குச்சிகள் 5, 6 கிலோகிராம் 250 கிராம் அமோனியம் நைட்ரைட், 64 அடி நீளமுள்ள சேவா நூல் -2, டெடனேட்டர் 10 என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் 6ஆவது கடல் சார் மாநாடு நாளை ஆரம்பம்-

34445இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ள 6 ஆவது சர்வதேச கடல் சார் மாநாடு நாளை முதல் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வரை காலியில் நடைபெறவுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 4 கடற்படை தளபதிகள் பங்கேற்கவுள்ளனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் 37 நாடுகள் 10 சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.