தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமந்தா பவர் சந்தித்துப் பேச்சு-

samantha tnaஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு அமெரிக்க தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது தமிழர் பிரச்சினைகள், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சிகைள் மற்றும் மீள்குடியேற்றம் என்பன தொடர்பாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்களநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன் அவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பான தீர்மானம் முழுமையாக நிறைவேற்ற மனித உரிமை பேரவை மற்றும் அமெரிக்கா தமது கடமைகளை முறையாக பேண வேண்டும் என இன்றைய சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வட மாகாணத்தில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டதாகவும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு அமெரிக்க தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது தமிழர் பிரச்சினைகள், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சிகைள் மற்றும் மீள்குடியேற்றம் என்பன தொடர்பாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்களநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இரா.சம்பந்தன் அவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பான தீர்மானம் முழுமையாக நிறைவேற்ற மனித உரிமை பேரவை மற்றும் அமெரிக்கா தமது கடமைகளை முறையாக பேண வேண்டும் என இன்றைய சந்திப்பின் போது வலியுறுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வட மாகாணத்தில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டதாகவும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.