யாழ்.வட்டு, கார்த்திகேய வித்தியாலய 120ம் ஆண்டு பரிசளிப்பு விழா-(படங்கள் இணைப்பு)
யாழ். வட்டுக்கோட்டை கர்த்திகேய வித்தியாசாலையின் 120ம் ஆண்டினை நினைவு கூறும் வகையில் பாடசாலையின் பரிசளிப்பு நிகழ்வு பாடசாலையின் அதிபர் ந.சிவசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தாhர்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக சங்கானைக் கோட்ட கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.சூ.நோபேட் உதயகுமார் அவர்களும், கௌரவ விருந்தினராக பாடசாலையின பழைய மாணவியும், வலிகாமம் கல்வி வலய அழகியல் பாடத்துறை உதவிக்கல்விப் பணிப்பாளருமான திருமதி. ஜெகதீஸ்வரி அருள்மயம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வில் பாடசாலை கல்விச் சமூகத்தின் விசேட அழைப்பின் பேரில் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.