வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மக்களுக்கு நிவாரணம்-(படங்கள் இணைப்பு)

photo 2 (3)முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளை ஆராய்ந்த முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர்களான கந்தையா சிவநேசன்(பவன்), துரைராசா ரவிகரன், அன்ரனி ஜெகநாதன் ஆகியோர் அவர்களுக்கான உலருணவு நிவாரணங்களை வழங்கியுள்ளனர். இதன்படி வட மாகாணசபை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் அவர்களுடைய மாகாணசபை உணவு வழங்கல் அமைச்சினால் வழங்கப்பட்ட உலருணவு நிவாரணங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வழங்கப்பட்டது.

photo 2 (3)photo 5 (1)photo 1 (2)