வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் 7 துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு(படங்ள் இணைப்பு)-

IMG_9545தமிழர்களின் சிறப்பு நாள் வாரத்தையொட்டி மல்லாவி பாண்டியன் குளம் ஆரம்ப பாடசாலை பாண்டியன்குளம் மகாவித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தை சேர்ந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மேற்படி நிகழ்வானது மல்லாவி பாண்டியன்குளம் மகா வித்தியாலத்தில் கல்லூரி அதிபர் முன்னிலையில் நேற்று (25.11.2015)புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க முன்னால் தலைவரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ், சங்க முன்னாள் செயளாளரும் தேசிய சேமிப்பு வங்கியின் கடன் நிறைவேற்று அதிகாரியுமான செ.செந்தூரன், துணுக்காய் சமுர்த்தி உத்தியோகத்தர் டி.குணதாஸ், கொமர்சல் வங்கி உத்தியோகத்தர் ரமணன், செலான் வங்கி உத்தியோகத்தர் நிரோசன், சங்கானை பிரதேச செயளக சமுர்த்தி உத்தியோகத்தர் திலீபன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேற்படி நிகழ்வில் பாண்டயன்குளம் ஆரம்ப பாடசாலையிலிருந்து கோகுலன் தமிழினி கேதீஸ்வரன் தமிழினி இந்திரராசா இந்துசா ஆகியோர்க்கும், பாண்டியன்குளம் மாகாவித்தில் இருந்து தேவராசா லிசிதா பத்மனாதன் சசிகலா நாகேந்திரன் தனுசியா மற்றும் கிளிநொச்சி மாகாவித்தியாலய மாணவி செல்வி ராகவி ஆகியோருக்கும் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பாக வழங்கபட்டன.

IMG_9545IMG_9519 IMG_9526 IMG_9529 IMG_9531 IMG_9533 IMG_9564