Header image alt text

கைதிகளின் விடுதலையில் நல்லெண்ணம் இல்லையெனில் தீர்விலும் நம்பிக்கையிராது-த.சித்தார்த்தன் பாஉ-

Annar kb (18)விட்டுக்கொடுப்புடனான கால அவகாசம் ஒன்றை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் எமது தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது. ஆனால் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை எனும் சிறிய விடயத்திலேயே தென்னிலங்கையின் நல்லெண்ணம் வெளிப்படாத நிலையில் பாரிய பிரச்சினையான தேசியப் பிரச்சினைக்கான தீர்வை எவ்வாறு முன்வைக்கப் போகிறீர்கள் என்ற கேள்வியும் சந்தேகமும் எமக்குள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் நேற்று சபையில் தெரிவித்தார்.

புலிகளுடன் தொடர்புபட்டிருந்த 12 ஆயிரம் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களால் நாட்டுக்கு ஏற்பட்டிராத பங்கம் நீண்டகாலமாக அரசியல் கைதிகளாக இருக்கும் 200க்கும் மேற்பட்டவர்களால் நாட்டுக்குப் பாதகம் என்று கூறுவதும், இவர்கள் போய் அந்த 12 ஆயிரம் பேரையும் அணிதிரட்டி விடுவார்கள் என்று தென்னிலங்கையில் எதிர்க்கட்சியினர் கூறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது.
Read more

முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாவை கைதுசெய்யுமாறு பரிந்துரை-

gotabayaசட்டவிரோதமாக ஆயுதங்களை இறக்குமதி செய்தல், அவற்றுக்குரிய அனுமதிப்பத்திரமின்றி அவற்றைத் தம்வசம் வைத்திருத்தல் மற்றும் இத்தகைய செயல்களுக்கு உதவுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பாதுகாப்பமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக், அவன்ட் காட் நிறுவனத்தின் தலைவர் நிஷங்க சேனாதிபதி உட்பட 5 பேரைக் கைதுசெய்ய ஆலோசனை வழங்குமாறு கோரி மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரட்ண பண்டார, சட்டமா அதிபருக்குப் பரிந்துரை செய்துள்ளார். இவர்களுக்கெதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும், அவர்களைக் கைதுசெய்து நீதவான் முன்னிலையில் நிறுத்துமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்க முடியும் எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவன்ட் காட் நிறுவனத்தின் மஹநுவர கப்பல் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட விசாரணை அறிக்கையைக் கவனத்தில் கொண்டே, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிக்கை வழங்கியுள்ளார். Read more

தண்டனையற்ற புனர்வாழ்வே வேண்டும்-அரசியல் கைதிகள்-

jailகுறுகிய தண்டனைகள் இன்றி வழக்குகளை இரத்து செய்து நேரடியாக புனர்வாழ்வுக்கு அனுப்பிவைக்குமாறு தமிழ் அரசியல் கைதிகள் சிலர் வவுனியா மேல் நீதவான் பிரேம் சங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகள் ஐவர் நேற்றையதினம் மேல் நீதிமன்ற நீதவான் பிரேம்சங்கர் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். ஏற்கனவே பிணையில் விடுதலை செய்யப்பட்ட மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வ.அஜித், குலசிங்கம் கோகுலராஜ் மற்றும் அநுராதபுரம் சிறையிலுள்ள குழந்தைவேல் தயாபரன், கார்த்திகேசன் நாதன், சூரியகாந்தி ஜெயச்சந்திரன் ஆகியோரே நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். இவ்வழக்கு விசாரணையின்போது புனர்வாழ்வு பெறுவதற்கு தயாரா? என தமிழ் அரசியல் கைதிகளிடம் நீதவான் வினவியுள்ளார். இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட அரசியல் கைதிகள், தங்களது வழக்குகளை இரத்துசெய்துவிட்டு தண்டனை அற்ற புனர்வாழ்வை வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து ஆராயப்படும் என அறிவித்த நீதவான், அரச தரப்பு சார்பில் சட்டத்தரணிகள் ஆஜராகாததை தொடர்ந்து வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜனவரி 12ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

சங்கானைக் கோட்ட முன்பள்ளிகளின் கலைவிழாவும் கண்காட்சியும்-(படங்கள்)

P1100616யாழ். சுழிபுரம் விக்Nhறியாக் கல்லூரியில் சங்கானைக் கோட்ட முன்பள்ளிகளின் கலை விழா இம்பெற்றது. இவ் நிகழ்வில் முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர், சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர், விக்டோறியாக் கல்லூரி அதிபர், வலி மேற்கு பிரதேச முன்பள்ளிகளின் இணைப்பாளர் மற்றும் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் ஒவ்வேர் முன்பள்ளிகளாலும் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு பொருட்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றது.
Read more

சுங்க அதிகாரிகள் மூவரும் பிணையில் செல்ல அனுமதி–

customsஅண்மையில் 125 மில்லியன் ரூபா இலஞ்சமாக பெறமுற்பட்டதாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட மூன்று சுங்க அதிகாரிகளும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சுங்க அதிகாரி சுஜீவ பராகிரம ஜூனதாஸ, பிரதி சுங்க அதிகாரி ஜகத் குணதிலக, உதவி சுங்க அதிகாரி எம்.டீ.யூ.ஜீ. பெரேரா ஆகிய மூன்று சந்தேகநபர்களும், கடந்த ஒக்டோபர் 15ம் திகதி கைதுசெய்யப்பட்டனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இவர்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், சந்தேகநபர்களை பிணையில் விடுவிப்பதை எதிர்க்கவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். இதன்படி மூவரையும் தலா ஒரு இலட்சம் ஷரூபா ரொக்கப் பிணை மற்றும் 50 இலட்சம் ஷரூபா சரீரப் பிணைகள் மூன்றில் விடுவிக்க, கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய உத்தரவிட்டுள்ளார். மேலும் சரீரப் பிணை வழங்கும் மூவரில் ஒருவர் அரச உத்தியோகத்தராக இருக்க வேண்டும் எனவும், சந்தேகநபர்கள் வெளஜநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராக வேண்டும் எனவும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 16ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இரு பஸ்கள் மோதிய விபத்தில் 17பேர் காயம்-

acciden tகினிகத்தேனை – தியகல பகுதியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர். நுவரெலியாவின் ஹட்டனிலிருந்து கண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றும் கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் வட்டவளை மற்றும் கினிகத்தேனை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மேலதிக சிகிச்சைக்காக நால்வர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தனியார் பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ் விபத்து நேர்ந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.