பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் அறுவருக்கு இடமாற்றம்-

policeகடமை நிமித்தம் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் அறுவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்பிரகாரம் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் தலைமை இன்ஸ்பெக்டர் எம்.பீ.யு.டி. குணதிலக அம்பாறை பொலிஸ் நிலையத்தின் சாதாரண கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் பலங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் தலைமை இன்ஸ்பெக்டர் எச்.பி.ஜி பிரசன்ன நாரஹேன்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரியாகவும், திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் உதய பண்டார பலங்கொடை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமை இன்ஸ்பெக்டரான ஏ.எஸ்.கே பண்டார சீதாவக்கபுர பிரிவு திருக்கோவில் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், கோணகங்ஆர உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி பீ.எம்.என் சமன்சிறி, ஹட்டன் பிரிவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.எம் ஆனந்த பண்டார கொழும்பு தெற்கு பிரிவிலிருந்து கோணகங்ஆர பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.