Header image alt text

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சைவ ஆலோசனைச் சபையின் சிவநெறி இறுவட்டு மற்றும் கரகம் ஆவணப்படம் வெளியீட்டு விழா-(படங்கள் இணைப்பு)

20151211_102346_resizedயாழ். வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சைவ ஆலோசனைச் சபையின் சிவநெறி இறுவட்டு-04 மற்றும் கரகம் ஆவணப்படம் வெளியீட்டு விழா கரவெட்டி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றுமுற்பகல் 10மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

திரு. ச.சிவஸ்ரீ (பிரதேச செயலாளர், தலைவர், சைவ ஆலோசனைச் சபை, பிரதேச செயலகம் கரவெட்டி) அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. பா. சேந்தில்நந்தனன் (மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. தர்மலிங்கம் மற்றும் திரு. சிவயோகன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

விருந்தினர்கள் கௌரவிப்பினைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. Read more

குப்பிழான் வடக்கு தெற்கு விவசாயிகள் சம்மேளனத்தின் விதை உருளைக்கிழங்கு விநியோக விழா -2015 (படங்கள் இணைப்பு)-

20151211_154848_resizedயாழ். குப்பிழான் வடக்கு தெற்கு விவசாயிகள் சம்மேளனத்தின் விதை உருளைக்கிழங்கு விநியோக விழா -2015 குப்பிழான் வடக்கு தெற்கு விவசாயிகள் சம்மேளனத் தலைவர் திரு. செ.நவரத்தினராசா அவர்களது தலைமையில் குப்பிழான் வடக்கு தெற்கு விவசாயிகள் சம்மேளனக் கட்டியத்தொகுதியில் இன்றுபிற்பகல் 2.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக திரு. நந்தகோபாலன் (பிரதேச செயலாளர், வலி தெற்கு, உடுவில்), திரு. கு.சுரேஸ்குமார் (கணக்காளர், கமநல அபிவிருத்தி திணைக்களம் யாழ்ப்பாணம்), திரு. நா.பஞ்சலிங்கம் (மாவட்ட கிராம அபிவிருத்தி அதிகாரி, யாழ்ப்பாணம்) ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக திரு. பி.மயூரதன் (கிராம சேவையாளர், குப்பிழான் தெற்கு ஜே-210),, திரு. என்.நவசாந்தன் (கிராம சேவையாளர், குப்பிழான் வடக்கு ஜே-211), திருமதி அமிர்தா (அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே-210), ப.மீனலோஜினி (வி.போதனாசிரியர் உடுவில்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். இதன்போது விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு விதைகள் விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், Read more

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் சீமெந்துப் பைகள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

p1வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த ழூங்கிலாறு தெற்கு உடையார்கட்டைச் சேர்ந்த கதிர்ச்செல்வன் கருணாநிதி என்பவருக்கு சங்கத்தின் தலைவர் கு.பகீரதன் பத்து சீமெந்துப் பைகளை வழங்கி வைத்தார். கதிர்செல்வன் கருணாநதி என்பவர் இந்து வாலிபர் சங்கத்திடம் தமது கிணறு கட்டுவதற்கு உதவி புரியும்படி விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக முதற்கட்டமாக இவ் சீமேந்து பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
Read more

சித்திரை புத்தாண்டிற்கு முன் உள்ளுராட்சி தேர்தல்-பிரதமர்-

localஉள்ளுராட்சி தேர்தலை எதிர்வரும் சித்திரை புத்தாண்டிற்கு முன்னர் நடத்த எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்பொருட்டு அரசியல் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்படல் வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆராயும் சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரமதர் இதனை தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணயம் தொடர்பில் இதுவரையில் சுமார் 2ஆயிரம் முறையீடுகள் கிடைக்கப்பெற்றள்ளன. இந்த முறைப்பாடுகள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இதன்போது கையளிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஜோன்ஸ்டன் மற்றும் கப்ரால் ஆகியோரை ஆஜராகுமாறு அழைப்பு-

jonstanமுன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரை பொலிஸ் நிதி குற்றங்கள் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மகாபொல லொட்டரியை மலேசியப் பிரஜை ஒருவருக்கு வழங்கியதில் இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அழைக்கப்பட்டுள்ளார். கொள்முதல் வழிமுறை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அஜித் நிவாட் கப்ரால் பொலிஸ் நிதி குற்றங்கள் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையர்கள் இருவர் இந்தியாவில் கைது-

arrestபோலியான கடவுச்சீட்டுக்களுடன் இலங்கையர்கள் இருவர் மற்றும் இந்திய பிரஜை ஒருவரும் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய குடிவரவு மற்றும் குடியகழ்வு அதிகாரிகளினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன. தாய்லாந்தின் பெங்கொக் நகர் நோக்கி செல்லவிருந்த நிலையிலேயே இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்னர். ஐகதான மூவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் விளக்கமறியலில் வைத்துள்ளதாக இந்திய செய்திகள் கூறுகின்றன.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் 14வது அமர்வு விசாரணைகள் ஆரம்பம்-

missing personsகாணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் 14வது அமர்வு விசாரணைகள் இன்று நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெறும் இந்த அமர்வில், நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட காணாமல் போனோரின் உறவினர்கள் தமது சாட்சியங்களை பதிவு செய்து வருகின்றார்கள். நல்லூர் பிரதேச செயலகத்தில் 235 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. யாழப்பாணம் பிரதேசம் மற்றும் பருத்தித்துறை, தெல்லிப்பளை, சண்டிலிப்பாய் உள்ளிட்ட பிரதேச செயலகங்களில் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

குமார் குணரட்னத்துக்கு மீண்டும் விளக்கமறியல்-

kumar gunaratnamகைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னிலை சோசலிஸக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குடிவரவு குடியகல்வுச் சட்டத்தை மீறி இலங்கையில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் 4ம் திகதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த நவம்பர் 27ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது. எவ்வாறாயினும் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட குமார் குணரட்னமை எதிர்வரும் 18ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி 08ம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு-

courtsபுலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் இருவரையும் ஜனவரி 19ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி ரேமா ஸ்வணாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீலங்கா இராணுவ கஜபா படையணியின் கேர்ணல் ஜயந்த சுரவீர உள்ளிட்ட 8 பேர் பயணித்த ஜீப்பின் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு அவர்களை படுகொலைச்செய்தனர் என்று அவ்விருவர் மீதும் அதிகுற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. வில்பத்து தேசிய வனாந்தரத்தில் வைத்தே அவ்விருவரும் இந்த தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கை ஜனவரி 18,19 மற்றும் 20ஆம் திகதிகளில் விசாரணைக்கு உட்படுத்துவதற்கும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சிறைச்சாலைகளில் 7975 கைதிகள் உள்ளனர்-அமைச்சர் சுவாமிநாதன்-

jailநாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தற்போது 7975 கைதிகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்களுள் கொலைக்குற்றம் சாட்பட்டவர்கள் 1211 பேரும் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 2995பேரும் மதகுருமார்கள் 17 பேரும் மற்றும் தாய்மார்கள் சிறையிலுள்ளமை காரணமாக குழந்தைகள் 58பேரும் சிறைச்சாலையில் உள்ளதாக கூறப்படுகிறது. புனர்வாழ்வு, மீள் குடியேற்றம், இந்து கலாச்சார மற்றும் சிறைச்சாலை சீர்திருத்தங்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

அகதி அந்தஸ்து விண்ணப்பத்தை மீள்பரிசீலனை செய்ய உத்தரவு-

canadaகனடாவில் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட இலங்கையர் ஒருவரின் விண்ணப்பத்தை மீள்பரிசீலனை செய்ய கனடாவின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயகண்ணன் கந்தசாமி என்ற 27 வயதான குறித்த இலங்கையர் கடந்த 2010ம் ஆண்டு குடும்பத்தாருடன் கனடாவுக்கு அகதியாக சென்றுள்ளார். எனினும் அவரது அகதி அந்தஸ்த்து கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இதற்கு எதிராக முறைபாடு செய்யப்பட்டிருந்த போதும், அதனை நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இந்நிலையில் தாம் நாடுகடத்தப்பட்டால், இலங்கையில் தமக்கு உயிராபத்து ஏற்படும் என்று கூறி அவரால் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், குறித்த விண்ணப்பத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நோர்வே வெளிநாட்டு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்-

norwayநோர்வேயின் வெளிநாட்டமைச்சர் போர்கே பிரென்டே, விஜயமொன்றை மேற்கொண்டு, அடுத்த வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். ஜனவரி 2016ன் முதல்வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ள அமைச்சர், வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகள் உள்ளடங்கலாக, இலங்கைக்கும் நோர்வேக்குமிடையிலான கூட்டுறவுக்கான வாய்ப்புகள் குறித்து, உயர்மட்டக் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த இலங்கை வர்த்தகக் கழகம், இலங்கையிலுள்ள நோர்வேத் தூதரகமும் இலங்கை வர்த்தகக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்யவுள்ள கலந்துரையாடலொன்றில், ஜனவரி 7ஆம் திகதி அவர் பங்குகொள்வார் எனத் தெரிவித்துள்ளது. இலங்கையில் முதலீடு செய்வதற்கு, நோர்வேயைச் சேர்ந்தோரின் ஆர்வம் அதிகரித்துள்ள பின்னணியிலேயே, அமைச்சரின் இந்த விஜயம் இடம்பெறுகின்றது.

காணாமற்போனோர்க்கான இழப்பீட்டை பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை-

missingஇழப்பீட்டு தொகையாக வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபாவினை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் கோரி வருவதாக இன்றைய தினம் ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்க வருகை தந்திருந்த தாயொருவர் குறிப்பிட்டுள்ளார். நல்லூர் பிரதேச செயலகத்தை சேர்ந்த காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்றன. இதில் தமது உறவுகளை தொலைத்த பலரும் கலந்து கொண்டு சாட்சியமளித்து வருகின்றனர். இதன்போது தனது காணாமல்போன மகன் தொடர்பில் சாட்சியமளிக்க வந்த தாயார், பார்வையிழந்த தனது கணவன் மற்றும் வலது குறைந்த தனது மற்றொரு மகனுடன் தாம் பெரும் இன்னல்களுக்கு மத்தியில் வசித்து வருவதாக தனது துயரை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதன்போது அவரது காணாமல்போன மகன் தொடர்பில் தாம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொள்வதாக உறுதியளித்த அதிகாரிகள், இழப்பீட்டு தொகையாக வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபாவினை பெற்றுக் கொள்ளுமாறு தாயாரிடம் குறிப்பிட்டுள்ளனர். Read more