Header image alt text

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ் கிளையின் ஏற்பாட்டில் கௌரவிப்பு விழா-(படங்கள் இணைப்பு)

20151212_174445_resizedதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ். மாவட்டக் கிளையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான (வர்ண இரவு) என்னும் கௌரவிப்பு விழா இன்றுபிற்பகல் நடைபெற்றது. மாகாண மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற இளைஞர் யுவதிகள் இந்நிகழ்வின்போது கௌரவிக்கப்பட்டார்கள். யாழ். லக்சுமி மண்டபத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரி திரு. சுபராஜ் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. பா.கஜதீபன், திரு. சுகிர்தன், திரு. ஆனோல்ட், ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள். இதன்போது இளைஞர் யுவதிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய மட்டத்திலான பணிப்பாளர்களும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் கிளையைச் சேர்ந்த பெருமளவிலான இளைஞர் யுவதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
Read more

ஏழாலை சைவசன்மார்க்க முன்பள்ளியின் புதிய கட்டிடத் திறப்புவிழா-(படங்கள் இணைப்பு)

20151212_095004_resizedயாழ். ஏழாலை சைவசன்மார்க்க முன்பள்ளியின் புதிய கட்டிடத் திறப்புவிழா இன்றுகாலை முன்பள்ளி நிர்வாகசபைத் தலைவர் திருமதி மல்லிகா ஆசிரியை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு. எஸ்.நந்தகோபாலன் (வலிதெற்கு, உடுவில் பிரதேச செயலாளர்), வட மாகாணசபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக சமய ஆராதனைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து விருந்தினர்கள் கௌரவித்து வரவேற்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து முன்பள்ளியின் புதிய கட்டிடம் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இப் புதிய முன்பள்ளிக் கட்டிடத்திற்காக கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது வட மாகாணசபை நிதியிலிருந்து ஒருதொகைப் பணத்தினை வழங்கியிருந்தார். மேற்படி கல்விக் கோட்டத்தில் இரண்டாவது ஆகக்கூடிய பிள்ளைகள் கல்வி பயில்கின்ற இடமாக இந்த முன்பள்ளி திகழ்கின்றமை குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இந்நிகழ்வில் பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர். Read more

உடுவில் பிரதேச செயலகத்தினால் விதை உருளைக்கிழங்கு விநியோகம்-(படங்கள் இணைப்பு)

20151211_165229யாழ். வலி தெற்கு, உடுவில் பிரதேச செயலாளர் திரு. நந்தகோபாலன் அவர்களின் ஏற்பாட்டில் உடுவில் பிரதேச செயலகத்தினால் விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் உருளைக்கிழங்கு விதை வழங்கும் நிகழ்வு நேற்றுமாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் உருளைக்கிழங்கு விதையினை வழங்கிவைத்தார். இந்நிகழ்வில் விவசாயபீட விரிவுரையாளர்கள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

முன்னாள் போராளிகள் மற்றும் உயிர்நீத்த போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி- (படங்கள் இணைப்பு)

image_1வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் திரு. பா. டெனீஸ்வரன் அவர்களினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் உயிர்நீத்த போராளிகளின் குடும்பங்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. மேற்படி உதவித் திட்டத்தின்கீழ் குடும்பம் ஒன்றிற்கு தலா 50,000 (ஐம்பதினாயிரம்) ரூபா வீதம் 137 குடும்பங்களுக்கு மேற்படி நிதியுதவிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர்: திரு. பா.டெனீஸ்வரன் அவர்களும், வட மாகாணசபை உறுப்பினர்களான திரு. கந்தையா சிவநேசன்(பவன்), திரு. துரைராசா ரவிகரன் மற்றும் மாவட்ட உதவி அரசாங்க அதிபர், முல்லைத்தீவு மாவட்ட பங்குத்தந்தை, கிராம அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகளும், பயனாளிகளும் கலந்து கொண்டிருந்தனர். Read more