Header image alt text

தமிழக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகள்

SL thamilarதமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக நீடித்த கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கில் இலங்கை அகதிகளின் சில முகாம்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிபூண்டி முகாமில் 200க்கும் அதிகமான வீடுகள் மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள இலங்கை அகதிகளுக்கான அமைப்பின் தலைவர் சிவகுமார் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஏற்கனவே பழுதடைந்த நிலையில் இருந்தவந்த இந்த முகாம் வீடுகள், மழை வெள்ளத்தில் மேலும் மோசமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அகதிகளுக்கு அரசு வழங்கிவருகின்ற உதவித் தொகைகள் மிகவும் குறைவாக இருக்கின்ற காரணத்தினால் இந்த வீடுகள் நீண்டகாலமாக பராமரிக்கப்படாத நிலையில் இருந்துவந்ததாகவும் சிவகுமார் கூறினார். Read more

இரத்தினபுரி கஹவத்தை கொலைச் சந்தேக நபர் மேலும் ஆறு பெண்கள் கொலைச் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டுள்ளார்.

dnaஇலங்கையில் இரத்தினபுரி கஹவத்தை பகுதியில் பெண்ணொருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபர், மேலும் ஆறு பெண்கள் கொல்லப்பட்ட சம்பவத்துடன் சம்பந்தப்பட்டுள்ளார் என்று பெல்மதுளை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரிடமிருந்து மீட்கப்பட்ட இரத்த கறைபடிந்த கத்திகள் மற்றும் ஆடைகளை மரபணு சோதனைக்குட்படுத்தியதில், கஹவத்தை கொட்டக்கெத்தன பகுதியில் கடந்த காலங்களில் மர்மமான முறையில் கொல்லப்பட்ட பெண்கள் ஆறு பேரின் மரபணுக்களுடன் பொருந்தியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். Read more

ததேகூ எம்.பி.க்களும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களாக நியமனம்.

tnaகடந்த காலங்களில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவர் பதவி ஆளுங்கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கப்பட்டது
இலங்கையில் முதற் தடவையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவர்களாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள 5 மாவட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களாக இம்முறை நியமனம் பெற்றுள்ளனர். Read more

சென்னை பல்கலை. கருத்தரங்கில் (இலங்கைப் பூர்வீக) மாணவர் மீது ‘தாக்குதல்’ 

universityசென்னையில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த கருத்தரங்கு ஒன்றின்போது மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள இயற்கை ஆபத்து மற்றும் பேரிடர் ஆய்வு மையத்தின் சார்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில், பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் கோபால்ஜி மாளவியா, மாநில தேர்தல் ஆணையத்தின் செயலரான ஜோதி நிர்மலா சாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். Read more