கூட்டமைப்பு (புளொட்) பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று, கவலைக்கிடமாக இருந்த இரு அரசியல்கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வந்த இரு அரசியல் கைதிகள் ‘புளொட்’ அமைப்பை சேர்ந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதத்தைத் தற்காலிகமாகக் கைவிட்டுள்ளனர்.
மேற்படி உண்ணாவிரதத்தில், ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்பட்ட நிலையில் அதனை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற வழக்கு யாழ் மேல் நீதிமன்றத்தினால் அவற்றை நிராகரித்து விடுதலை செய்யப்பட்ட சிவராஜா ஜெனிபர் 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையிலும்; இவருடன் மற்றுமொரு அரசியல் கைதியான வவுனியா நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர் முருகேசு கோமகன் 8 நாட்கள் உண்ணராவிரதம் இருந்து வந்த நிலையிலும் பொலநறுவை பகுதியில் தடுத்து வைக்கப்பட்டு தற்போது கொழும்பு மகஸின் சிறைச்சாலையிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். Read more