வெள்ளப் பாதிப்புக்குள்ளான மக்களது தேவைகள் குறித்து ஆராய்வு-(படங்கள் இணைப்பு)

10579336_897577417022850_1686916654_oஅண்மையில் வவுனியாவில் பெய்த கடும்மழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் பாதிக்கப்பட்ட கிராமங்களான புதிய கற்குளம், பழைய கற்குளம், சிதம்பரபுரம் மற்றும் ஏனைய கிராமங்களைச் சேர்ந்த மக்களை வவுனியா பிரதேச செயலாளர் திரு.உதயராசா, வட மாகாண சபை உறுப்பினர் திரு. ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு. க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். மக்களின் உடனடி தேவைகள், அனர்த்தத்தால் எற்பட்ட சேதங்கள், கிராமங்களின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது. இவ் கலந்துரையாடலில் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாக உறுப்பினர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

989503_897577157022876_438315130_o 1419168_897577167022875_1414344198_o 1419196_897590770354848_1604940968_o 10579336_897577417022850_1686916654_o 12369799_897585787022013_406471332_o 12375789_897588433688415_1056172033_o 12389236_897584097022182_102530330_o 12394730_897591140354811_1143545715_o