Header image alt text

தேர்தல் வாக்காளர் இடாப்பு இணையத்தளத்தில் பிரசுரிப்பு-

vote2015ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு இன்றுமுதல் தேர்தல்கள் செயலகத்தின் இணையத்தளத்தில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வாக்காளர் இடாப்பு இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இந்த காலப்பகுதியில் வாக்காளர் இடாப்பில் உள்ள பெயரில் குறைப்பாடுகள் காணப்படுமாயின், மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளருக்கு அல்லது தேர்தல்கள் செயலகத்திற்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். றறற.நடநஉவழைn.டம எனும் இணையத்தள முகவரியூடாக 2015ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு தொடர்பிலான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் எனத் தேர்தல்கள் செயலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

நாலக்க உள்ளிட்ட மூவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்-

nalakaபங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் நாலக்க கொடஹேன உள்ளிட்ட மூவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி இவர்களை எதிர்வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளனர். தனது பதவிக் காலத்தில் இளைஞர்களுக்கான நாளைய அமைப்புக்கு 50 இலட்சம் ரூபா நிதி வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கான நாலக்க கடந்த 7ம் திகதி பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார். இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட அவரை கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியவேளை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனையிலிருந்து தப்பிய இலங்கைப் பெண்-

 saudi arabiaசவுதி அரேபியாவில் ஆணொருவருடன் தகாத உறவைப் பேணியதாக குற்றம்சாட்டப்பட்டு கல்லால் அடித்து கொல்லுமாறு, இலங்கைப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை, சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட மேன்முறையீட்டை அடுத்தே, அந்த நாட்டு அரசாங்கத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார். இதன்படி குறித்த பெண் மூன்று வருடங்கள் சிறையில் இருக்க வேண்டும் எனத் தெரியவந்துள்ளது.

ஐரோப்பாவிற்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு-

boatகடல் வழியாகவும், தரை மூலமாகவும் ஐரோப்பாவுக்குள் நுழைந்த குடியேறிகளின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டிவிட்டதாக குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஜி.எம்) கூறியுள்ளது. இது கடந்த வருடத்தை விட 4 மடங்கு அதிகமாகும். இதில் பெருமளவிலானோர் கடல் மார்க்கமாகவே வந்துள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானோர் துருக்கியில் இருந்து கிரேக்கத்துக்கு கடல் வழியாக வந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதிகளாவர். 3695 பேர் கடலில் மூழ்கியுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்றும் ஐ.ஓ.எம் கூறியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த திங்களன்று எட்டப்பட்டதாகவும், கடல் மற்றும் தரை மார்க்கமாக வந்தவர்களின் எண்ணிக்கை 1,005,504 ஆகும் என்றும் அது கூறுகின்றது. கிரேக்கம், பல்கேரியா, இத்தாலி, ஸ்பெயின், மால்டா மற்றும் சைப்பிரஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் ஊடாக வந்தவர்களே இவர்களாவர். 455,000 பேர் சிரியாவைச் சேர்ந்த அகதிகள், 186,000 க்கும் அதிகமானோர் ஆப்கானில் இருந்து வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக விழிப்புலணற்ற 11 மாணவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அன்பளிப்புகள்-(படங்கள் இணைப்பு)

5போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் இயற்கையாக விழிப்புலனற்ற மாணவர்கள் தமது விரிவுரைகளின் போது ஒலிப்பதிவு செய்து பின்னர் அதனை குறிப்பு எடுத்து கற்றுக்கொள்வதற்கு ஒலிப்பதிவு கருவி இல்லாது பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனார் இவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக ஒலிப்பதிவு கருவிகளை தந்துதவுமாறு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட விழிப்புலணற்ற மாணவர்களினால் வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் கோரிக்கை விடப்பட்டது. இதற்கு அமைவாக இன்று வட்டு இந்து வாலிபர் சங்க தலைமைச் செயலகத்தில் சங்கத்தின் செயளாளர் இ.தக்சன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேருக்கு தலா 8.250 ரூபா பெறுமதியான 11 ஒலிப்பதிவு கருவிகள் மற்றும் 10000 ரூபா பெறுமதியான ஒரு துவிச்சக்கர வண்டி என்பன வழங்கப்பட்டன. மேற்படி நிகழ்வில் திரு.வள்ளிபுரம் (பிரதிநிதி ஓம் சரவணபவ சேவா அறக்கட்டளை நிதியம் லண்டன்) வட்டுக்கோட்டை இலங்கை வங்கி முகாமையாளர் திரு.வே.புவனேந்திரராஜா அராலி சரஸ்வதி மகாவித்தியாலய அதிபர் திரு.ந.சபாரட்ணசிங்கி (சங்க போசகர்) சங்க அங்கத்தவர்கள் மற்றும் விழிப்புலணற்ற யாழ் பல்கலைக்கழக கலைப்பிரிவு மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். Read more

பொறுப்புக் கூறலுக்கு இராணுவம் ஒத்துழைக்க வேண்டும்-அமெரிக்கா-

Fஇறுதிப்போரில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் நம்பகமான நீதிப் பொறிமுறைக்குப் படையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அத்துடன், படைத் தேவைகளுக்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைக்க வேண்டுமெனவும் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களம் இலங்கைப் பாதுகாப்பு உயர்மட்டங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. மூன்றுநாள் பயணமாக கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலர், கலாநிதி அமி சீரைட், இலங்கைப் பாதுகாப்பு உயர்மட்டங்களிடம், இதனை வலியுறுத்திக் கூறியுள்ளார். கடந்த சனிக்கிழமை, மூன்று நாள் இலங்கை பயணத்தை கலாநிதி அமி சீரைட் முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ள நிலையில், அவரது பயணம் தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், மனிதாபிமான உதவிகள், இயற்கைப் பேரிடர்களில் பணியாற்றுதல், வெளிநாடுகளில் அமைதிகாப்பு நடவடிக்கைகளில் பங்களிப்பை அதிகரித்தல் போன்றவற்றில் இலங்கை படைகளின் எதிர்கால பங்கு குறித்து ஆராயவே, கலாநிதி சீரைட் கொழும்பு வந்திருந்தார். இவர், இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெற்றியாராச்சி, வெளிவிவகாரச் செயலர் சித்ராங்கனி வகீஸ்வரா, ஆகியோருடன், பாதுகாப்பு துறை மறுசீரமைப்பு, பயிற்சி மற்றும் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஆளனி உதவி வழங்கல், உள்ளிட்ட இலங்கை அரசின் முயற்சிகள் குறித்து கலந்துரையாடினார். Read more

கடல் நீரை குடிநீராக்க வேண்டாமென வலியுறுத்திய போராட்டம் நிறைவு-

uyuyவடமராட்சி கடலில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு முன்னெடுக்கப்படவுள்ள குடிநீர்த் திட்டத்தை எதிர்த்து வடமராட்சி கடற்றொழிலாளர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இன்றுகாலை மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். குறித்த பிரதேசத்திலிருந்து கடல்நீரை கொண்டுசெல்லும்போது, தமது வாழ்வாதார தொழிலான மீன்பிடி பாதிக்கப்படுமென பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், கடல்நீரை சுத்தமாக்குவதற்காக அதிவலு கொண்ட இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்போது, அதனால் கடல்வளம் பாதிக்கப்படும்நிலை ஏற்படுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். தமது ஜீவனோபாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் குறித்த திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோமெனவும் தெரிவித்து மருதங்கேணி மக்கள் இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் ஸ்தலத்துக்கு வருகைதந்த வடமாகாண சபை உறுப்பினர் எஸ். சுகிர்தன், “கடல் நீரை குடிநீராக எடுக்கும் திட்டத்தினை நீங்கள் எதிர்க்கும் சந்தர்ப்பத்தில், உங்களின் கோரிக்கைகளை வடமாகாண முதலமைச்சருக்கு தெரியப்படுத்துகின்றோம். Read more

ஹிருணிகாவின் வாகனத்தில் கடத்தல், அறுவருக்கு விளக்கமறியல்-

courtsகொழும்பு, தெமட்டகொடை கடத்தல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஆறு பேரையும் எதிர்வரும் ஜனவரி 4ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 34 வயதான ஒருவரைக் கடத்தி, தாக்கியதோடு, அநாதரவாக விட்டுச் சென்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், அறுவர் நேற்றையதினம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்ததை அடுத்து கைதுசெய்யப்பட்டனர். முன்னதாக, சந்தேகநபர்கள் பயணித்ததாக கூறப்படும் டிபென்டர் ஒன்று கைப்பற்றப்பட்டதோடு, அது பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமானது எனவும் தெரியவந்தது. இதேவேளை இந்த விடயம் குறித்து நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளித்த ஹிருணிகா, தெமட்டகொடை பிரதேசத்தில் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு தனது டிபென்டர் பயன்படுத்தப்பட்டது உண்மை எனினும், அது தனது அனுமதியுடன் செய்யப்பட்ட ஒன்றல்ல என தெரிவித்துள்ளார். தனது அலுவலகத்தில் பணிபுரியும் பாதுகாப்பு தரப்பினரிடம் வந்த, ஒருவர் தனது மனைவி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கூறியதோடு, கடத்தல்காரர் இருப்பதாக கூறப்படும் இடம் தனக்கு தெரியும் எனவும் குறிப்பிட்ட நிலையில், தனது சேவையாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள், சென்றதாக ஹிருணிகா குறிப்பிட்டுள்ளார். Read more