வட மாகாணசபை உறுப்பினர் க.சிவநேசன் ஆலய மற்றும் இல்ல பணிகளுக்கு நிதியுதவி(படங்கள் இணைப்பு)

photo (7)ஆலய திருப்பணிகள் மற்றும் இல்லப் பணிகள் என்பவற்றுக்காக மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்) அவர்களின் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து தண்ணீரூற்று ஊற்றங்கரைப் பிள்ளையார் கோவிலுக்கு 2 லட்சம் ரூபாவும், கணுக்கேணி கற்பகப் பிள்ளையார் கோவில், குமாரபுரம் சித்திரவேலாயுதர் கோவில், முள்ளிவாய்க்கால் பத்திரகாளியம்மன் கோவில், வற்றாப்பளைப் பிரம்மகுமாரிகள் நிலையம், சாய் சமுர்த்தி இல்லம் ஆகியனவற்றுக்கு ஒவ்வொன்றுக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய், வீதமும் நேற்று (28.12.2015) வழங்கிவைக்கப்பட்டன. மேற்படி நிதியுதவியினை மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள் வழங்கிவைத்தார். இந்நிகழ்வில் வன்னி மேம்பாட்டுக் கழகம் மற்றும் சாய் சமுர்த்தி இல்ல தலைவர் திரு.தவராஜா மாஸ்டர் அவர்களும் கலந்துகொண்டார்.

photo (2) photo (3) photo (4) photo (5) photo (6) photophoto (1)