வலி வடக்கு, கிழக்கு பகுதி மக்களது தேவைகள் குறித்து பா.உ சித்தார்த்தன் ஆராய்வு-(படங்கள் இணைப்பு)

IMG_3413வலி. வடக்கு மற்றும் கிழக்கில் உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்டிருந்த 700 ஏக்கர் காணி அரசாங்கத்தினால் மீள்குடியேற்றத்துக்காக நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 468.5 ஏக்கர் நிலமும் வலி.கிழக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 233ஏக்கர் நிலமுமே நேற்று மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி வலி.வடக்கு பகுதியில், காங்கேசன்துறை தெற்கு, பளை வீமன்காமம் வடக்கு, தையிட்டி தெற்கு, பலாலி தெற்கு, பலாலி கிழக்கு, பலாலி வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் மொத்தமாக 468.5 ஏக்கர் நிலமும், வலி.கிழக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட வளலாய் பகுதியில் 233ஏக்கர் நிலமும் மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 25 வருடங்களுக்குப் பின் தமது சொந்த மண்ணை இடம்பெயர்ந்திருந்த மக்கள் இன்று நேரில்சென்று பார்வையிட்டனர். இதன்போது புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டதோடு அந்த மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

IMG_3404 IMG_3406
IMG_3409
IMG_3410 IMG_3412 (1)
IMG_3413