தோழர் சுந்தரம் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுதினம்-

vcvcvcvcvvvதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகர்களுள் ஒருவரும், தளபதியும், புதியபாதை ஆசிரியருமான தோழர். ச.சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) அவர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட 34ஆவது ஆண்டு நினைவுதினம் 02.01.2016 ஆகும்

அன்னாரின் நினைவுகூரல் நிகழ்வுகள் புளொட் அமைப்பின் மாவட்ட அலுவலகங்களில் நேற்று நடைபெற்றுள்ளது. சிறந்த தலைமைப் பண்பும், துணிச்சலும், போராட்ட தெளிவும் மிக்க பொதுவுடைமைவாதியான தோழர் சுந்தரம் அவர்கள்

02.01.1982ல் யாழ்ப்பாணம் சித்திரா அச்சகத்தில் ~~புதியபாதை~~ பணியில் ஈடுபட்டிருந்தபோது, அச்சகத்தின் பின்புறமாக மறைந்திருந்து வேலுப்பிள்ளை பிரபாகரன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.