ஓட்டுசுட்டான் சின்னச்சாளம்பன் ஈஸ்வரன் வித்தியாலய புதிய கட்டிட திறப்புவிழா-(படங்கள் இணைப்பு))
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பன் ஈஸ்வரன் வித்தியாலயத்திற்கான புதிய கட்டிடத் திறப்பு விழா நேற்று (08.01.2016) பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வட மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா, வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் (பவன்), வட மாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கனகரத்தினம்,
துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது விருந்தனர்கள் கௌரவித்து வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதைத் தொடர்ந்து பாடசாலைக்கான புதிய கட்டிடம் திறந்துவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.