Header image alt text

வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு விசேட கருத்தரங்கு-

fghghghசுவிட்ஸர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் அரசியலமைப்பு அணியொன்றினால் நடத்தப்பட்ட வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு, யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று நடைபெற்றது.

பேராசிரியர் நவரத்ன பண்டார தலைமையிலான அரசியலமைப்புக் கற்கை நிறுவனமும், சுவிட்ஸர்லாந்தின் பிரிபோக் பல்கலைக்கழகமும் இணைந்து இந்தக் கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தன. ‘

அதிகாரப்பகிர்வு, அரசியலமைப்பு மாதிரிகள், பல்லின சமூகங்களில் சவால்கள் மற்றும் பார்வைகள்’ எனுப் கருப்பொருளில் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மிருசுவில் கொலை வழக்கு மூவருக்கு மரணதண்டனை-

jaffna courtsயாழ். மிருசுவில் பகுதியில் நபர் ஒருவரை உலக்கையால் அடித்துக்கொலை செய்த மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு மார்கழி மாதம் முருகேசு சத்தியநாதன் என்பவரே அவரது வீட்டில் வைத்து இவ்வாறு அடித்துக்கொலை செய்யப்பட்டவராவார். கோலையைச் செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில், அதே இடத்தைச் சேர்ந்த 3 நபர்கள் சாவகச்சேரி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். மேற்படி வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில், இன்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் தீர்ப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தீர்ப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு, முருகேசு சத்தியநாதனின் வீட்டிற்கு சென்ற மூவரும், அவரை உலக்கையால் தலையில் அடித்துக்கொலை செய்துள்ளனர். கொலை செய்த உலக்கையினை சாவகச்சேரி குடம்பியன் இராணுவ முகாமிற்கு அருகாமையில் உள்ள வயல்வெளியில் இரத்தத்துடன் வீசிவிட்டுச் வாகனத்தில் சென்றுள்ளனர். குறித்த உலக்கையினை எறியும்போது, அதைக்கண்ட இராணுவ சிப்பாய் இராணுவ அதிகாரிக்குத் தெரிவித்து, குறித்த உலக்கை தடயப்பொருளாக இராணுவத்தினரால் மீட்கப்பட்டது. Read more

காணி உறுதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு நிரந்தர உறுதிப்பத்திரம்-

fdfdகாணி உறுதிப்பத்திரம் இல்லாத காணி உரிமையாளர்களுக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இம்முறை வரவு செலவுத்திட்ட தீர்மானத்திற்கு அமைய 17 இலட்சம் உரிமையாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளதாக காணி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.ஏ.கே. மஹாநாமா தெரிவித்துள்ளார். இதன்கீழ் சுவர்ணபூமி, ஜயபூமி, ஆகிய உறுதிப்பத்திரங்களை வைத்திருப்பவர்களுக்கும், ஏனைய அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்பதவர்களுக்கும் நிரந்தர காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான காணி சட்டத்திருத்தத்தை அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் காணி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த விடயம் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் எதிர்வரும் 20 ஆம் திகதி கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்கு 50 சூட்கேசு அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

iமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இனிய வாழ்வு இல்லத்தின் நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் 16.01.2016 அன்று

இல்ல மாற்றுத்திறனாளி மாணவர்களான விழிப்புலனற்றோர் செவிப்புலனற்றோர் வாய்பேச முடியாதவர்கள் என 50 இல்ல சிறார்களுக்கு

ரூபா 65000 பெறுமதியான 50 சூட்கேசுகள் அன்பளிப்பாகவழங்கபட்டன. அத்துடன் இல்ல சிறார்களுக்கு சிறப்பு மதிய உணவும் வழங்கபட்டது. (வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் ) Read more

முல்லைத்தீவில் இருந்து ஒட்டுசுட்டான் ஊடாக யாழ்ப்பாணம் பஸ் சேவை-(படங்கள் இணைப்பு)

20160114_070702முல்லைத்தீவில் இருந்து தண்டுவான், நெடுங்கேணி, ஒட்டுசுட்டான் ஊடாக யாழ்ப்பாணம் பஸ் சேவை பல ஆண்டுகளுக்குப் பின்னர் (14.01.2015) அன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவமோகன், சாந்தி சிறீஸ்கந்தராசா ஆகியோரும், வடமாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநரதன், க.சிவநேசன் (பவன்) அவர்களும் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் வடபிராந்திய பிரதான முகாமையாளர் உபாலி கிரிபத்துடுவ, செயலாற்று முகாமையாளர் கே.கேதீஸ்வரன், கணக்காளர் கே.செவ்வந்திராஜா, முல்லைச்சாலை முகாமையாளர் எஸ்.மனோகரன், முல்லைச்சாலை பொறியியலாளர் பி.ஆர்.றோமியன், காரைநகர்சாலை முகாமையாளர் கே.ஜெயராஜா முல்லை, ஆகியேரருடன் பிரதேசமக்கள், பொது அமைப்புக்களின் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர். Read more

வட்டு.இந்து வாலிபர் சங்கத்தால் புத்தகபைகள் வெற்றிக்கிண்ணங்கள் அன்பளிப்பு-(படங்கள் இணைப்பு)

cவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மற்றும் இராமநாதன் கல்லூரி மாணவர்களுக்கு 15.01.2016 ஆகிய தைத்திருநாள் அன்று புத்தகபைகள் வழங்கப்பட்டுள்ளதுடன்

சுழிபுரம் விக்ரோறியா கல்லூரிக்கு 10 புதிய வெற்க்கிண்ணங்களும் வழங்கப்பட்டன.

இவ் வெற்றிக்கிண்ணங்கள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமை செயலகத்தில் வைத்து கல்லூரி பிரதி அதிபர் இந்திரா தவநாயகம் அவர்களிடம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர்.கு.பகீதரனால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. Read more

தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலய கால்கோள் விழா-(படங்கள் இணைப்பு)

IMG_3291வவுனியா தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்தின் கால் கோள் விழா (14.01.2015) அன்றுகாலை 9மணிக்கு, வித்தியாலய அதிபர் திருமதி சி.பத்மநாதன் அவர்களின் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது. தரம் 01ற்கு புதுமுக மாணவர்களை வரவேற்கும் இவ் கால் கோள் விழாவின் பிரதம விருந்தினராக வட மாகாண சபை உறுப்பினர் திரு எம்.பி.நடராஜா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு.க.சந்திரகுலசிங்கம்(மோகன்), மகாறம்பைக்குளம் கிராம சேவையாளர் திரு வே.கனகவேல்ராஜா ஆகியோருடன் இவ் நிகழ்வில் வித்தியாலய ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. Read more