முல்லைத்தீவில் இருந்து ஒட்டுசுட்டான் ஊடாக யாழ்ப்பாணம் பஸ் சேவை-(படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவில் இருந்து தண்டுவான், நெடுங்கேணி, ஒட்டுசுட்டான் ஊடாக யாழ்ப்பாணம் பஸ் சேவை பல ஆண்டுகளுக்குப் பின்னர் (14.01.2015) அன்று ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவமோகன், சாந்தி சிறீஸ்கந்தராசா ஆகியோரும், வடமாகாணசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநரதன், க.சிவநேசன் (பவன்) அவர்களும் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் வடபிராந்திய பிரதான முகாமையாளர் உபாலி கிரிபத்துடுவ, செயலாற்று முகாமையாளர் கே.கேதீஸ்வரன், கணக்காளர் கே.செவ்வந்திராஜா, முல்லைச்சாலை முகாமையாளர் எஸ்.மனோகரன், முல்லைச்சாலை பொறியியலாளர் பி.ஆர்.றோமியன், காரைநகர்சாலை முகாமையாளர் கே.ஜெயராஜா முல்லை, ஆகியேரருடன் பிரதேசமக்கள், பொது அமைப்புக்களின் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.