Header image alt text

‘சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு’ கூட்டமைப்பு வலியுறுத்தல்

TNAஇலங்கையில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வின் அடிப்படையின் அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 
நாட்டில் புதிய அரசியல் சாசனம் ஒன்றை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில், கூட்டமைப்பின் இந்தக் கருத்து வந்துள்ளது.

கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Read more

வெளிநாட்டு நீதிபதிகளை ‘இறக்குமதி’ செய்யப்போவதில்லை – ஜனாதிபதி மைத்திரி
 
maithriஇலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை. என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து நிபுணர்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் பிபிசிக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலில் அவர் கூறியுள்ளார்.

‘உள்நாட்டு பொறிமுறை மூலமாகத் தான் இந்த நடவடிக்கையை செய்ய வேண்டும் என்று மிகவும் தெளிவாக நான் கூறியிருக்கிறேன். அவ்வாறே எமது அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவும் அது அமையவேண்டும். அதேபோல, வெளிநாடுகளிலிருந்து நீதிபதிகளைக் கொண்டுவரவும் எதிர்பார்க்கவில்லை.அதற்கு நான் இணங்கவும் மாட்டேன்’ என்றார் மைத்திரிபால சிறிசேன. Read more