Header image alt text

ஈழ மகா காவியம் எழுதுவேன்! முல்லைத்தீவில் உருக்கமான பேச்சு – கவிஞர் வைரமுத்து

vairamuthtuமுல்லைத்தீவில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். இதன்போது சிறப்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து ‘ஈழ மகாகாவியம் எழுதுவதை என் வாழ் நாளின் பெரும்பணியாகக் கருதுகிறேன்’ என, குறிப்பிட்டார்.

கவிஞர் வைரமுத்து பேசியதாவது, Read more

மலையக மக்களை இலக்கு வைக்கும் ‘சிறுநீரக வியாபாரக் கும்பல்கள்’

kidneyஇலங்கையின் மலையகத்தில் வறுமையில் பிடியில் வாடும் தோட்டத் தொழிலாளர்களை குறிவைத்து சட்டவிரோத சிறுநீரக வியாபாரத்தில் சிலர் ஈடுபட்டுவருவதாக மலையகத்தைச் சேர்ந்த அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்களை இலக்குவைத்து இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்துவருவதை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஏற்கனவே உறுதிசெய்திருப்பதாகவும் கல்வி அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் பிபிசி தமிழோசையிடம் கூறினார். Read more

ஈழத்துப் பாடல்கள் – பகுதி ஒன்று – சீவகன் (BBC)

tamilஎழுபதுகளில் இலங்கையில் இருந்து ஒலித்த தமிழ் பொப்பிசை பாடல்கள் அந்த நாட்டின் கடல்களைக் கடந்தும் அந்த சின்னத் தீவை திரும்பிப் பார்க்க வைத்தவை. துள்ளல் இசை என்றால் இலங்கை இசைதான் என்ற அளவுக்கு அவை பலரையும் ஈர்த்திருந்தன. ஆனால், மேற்கத்தை பாணி இசையாக கருதப்படும் பொப் இசையை மையமாகக் கொண்ட இப்படியான பாடல்கள் மாத்திரந்தான் இலங்கை தமிழர்களின் இசையின் அடையாளம் என்று சொல்லிவிட முடியாது. Read more

ஆசியாவின் பல பகுதிகளில் கடுமையான குளிர், போக்குவரத்து பாதிப்பு
 
snowஆசியாவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
தென் கொரியத் தீவான ஜேஜூவில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுகு பனிப்பொழிவு ஏற்பட்டதால அப்பகுதியில் இரண்டாவது நாளாக விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பல இடங்களில் சிக்கியுள்ளனர்.

 தென் கொரியாவில் வீசும் கடும் பனிப் புயலால் பலர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
கடும் பனி மற்றும் வேகமாக வீசும் காற்றின் காரணமாக ஜப்பானிலும் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
 
மிதமான வெப்ப நிலைக்கு பழக்கமான ஹாங்காங் வாசிகளும் வெப்பநிலை மூன்று டிகிரிகளுக்கு குறைந்ததை அடுத்து குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். சீனாவின் பல இடங்களில் தொடரும் பனிப் பொழிவு கடந்த 60 ஆண்டுகளில் இந்த அளவுக்கு அங்கு வெப்பம் குறைந்தது இல்லை.

சீனாவின் பல பகுதிகளிலும் கடுமையான காலநிலை நிலவி வருவதால், அரசு இரண்டாவது அதியுச்ச வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அமெரிக்க பனிப்புயலில் 18 பேர் வரை பலி

us_stormஅமெரிக்காவின் அண்மைய வரலாற்றில் மிகப்பெரிய பனிப்புயலில் ஒன்றாக கருதப்படும் குளிர்கால பனிப்புயல் தாக்கியதில் கிழக்கு கடற்கரையோரப் பிராந்தியத்தின் அன்றாட வாழ்க்கை ஸ்திம்பித்துள்ளது. அமெரிக்காவில் பயங்கரமான காற்று மற்றும் பனிப்பொழிவுடன் சம்பந்தப்பட்டதாக 18 மரணங்கள் பதிவாகியுள்ளன.

லட்சக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. சில இடங்களில் படிந்த ஒரு மீட்டர் உயரம் வரையிலான பனி காரணமாக ரயில்களும், பஸ்களும் மற்றும் விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

நியூயார்க்கில் முழுமையான பயணத்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைகள், அருங்காட்சியகம் மற்றும் திரையரங்குகள் மூட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. சூதாட்ட மையங்களும் மூடப்பட்டன.
 
இப்போது இந்த பனிப்புயல் குறைந்து அத்திலாந்திக் கடலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்ற போதிலும் அதன் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதே நேரம் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 பதிவாகியிருப்பதாக அமெரிக்க நிலவியல் ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.