Header image alt text

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பொதுமக்களிடம் வேண்டுகோள்-

sfdfdfdஅதிர்ஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக கூறி வரும் தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதில் வழங்காதிருக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து இவ்வாறான அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் கிடைக்கப் பெறுவதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவிக்கின்றது. மக்களை திசை திருப்பி மோசடி செய்து பணம் சம்பாதிக்கும் வழிமுறையாக இது காணப்படுகிறது என்று தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி அவ்வாறான தொலைபேசி அழைப்புக்களை தடுப்பதற்கு விஷேட வேலைத்திட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களையும் அறிவுறுத்தி இருப்பதாகவும் மக்களை அறிவுறுத்துவதற்காக போஸ்டர் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு தொலைபேசி இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதில் வழங்கும்போது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் சந்தேகம் ஏற்பட்டால் 1900 என்ற இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் ஆணைக்குழு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

யோஷித ராஜபக்ஷவிடம் விசாரணை, மஹிந்தவின் ஊடக ஒருங்கிணைப்பாளரிடம் விசாரணை-

yosithamahi முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவிடம் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடற்படைத் தலைமையகத்தில் அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக ஒருங்கிணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை செய்வதற்காகவே நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். சிஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடி குறித்து விசாரணை செய்வதற்காகவே அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கத்திக் குத்தில் ஒருவர் உயிரிழப்பு-

cut killed (2)முல்லைத்தீவு, மாந்தை கிழக்கில் இரு குழுக்களுக்கிடையில் இன்று அதிகாலை இடம்பெற்ற கைகலப்பில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,

இன்னொருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாந்தை கிழக்கின் நட்டாங்கண்டல் சிறாட்டிக்குளம் வயல்வெளிப் பகுதியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் பாண்டியன்குளம் 50 வீட்டுத்திட்டத்தினைச் சேர்ந்த சந்திரபாலன் சந்திரகுமார் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.

நட்டாங்கண்டலைச் சேர்ந்த தங்கராசா குணதீபன் (வயது 30) என்பவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியாவில் கேபிள் கார் திட்டம்-

cable carநுவரெலியா நகரத்தை அண்மித்த பிரதேசங்களில் கேபிள் கார் வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் நேற்றையதினம் பிற்பகல் நுவரெலியாவில் வைத்து கையெழுத்திடப்பட்டுள்ளதுடன், 06மாத காலத்துக்குள் இப்பணிகளை நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதத்தில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன், அதற்காக 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளதாக நுவரெலியா நகர முதல்வர் மஹிந்த தொடம்பேகமகே தெரிவித்துள்ளார்.

இராணுவம் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளது-ஜனாதிபதி-

vvஇலங்கை இராணுவம் சர்வதேச சட்டங்கள் மற்றும் இலங்கையின் சட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு வழங்கிண நேர்காணலில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். யுத்தத்தின்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக புலிகள் ஒருபோதும் செயற்படவில்லை. இலங்கையின் இராணுவம் இந்த நியமங்களை மதித்து அனைத்து சந்தர்ப்பங்களிலும் செயற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின்போது பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த எவரேனும் ஒருவரினால் தவறிழைக்கப்பட்டிருந்தால், அதுகுறித்து விசாரணைப் பொறிமுறைக்குள் கண்டறியப்பட வேண்டும். தவறிழைத்தமை கண்டறியப்படுமாயின், அதனுடன் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதற்கு முன்னரும் நாம் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கின்றோம். எமது நாட்டின் சுயாதீனத் தன்மைக்கு அமைவாகவே அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதற்காக விஷேடமாக வெளிநாடுகளில் இருந்து தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும், என்றாலும் வெளிநாட்டு நபர்களை இந்நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கான தேவை இருக்காது. Read more

சார்ஜா 7வது சர்வதேச சாரணர் ஒன்றுகூடலில் இலங்கை பிரதிநிதியாக வவுனியா இளைஞன் ஸ்ரீ.கேசவன்-

6134சார்ஜாவின் 7வது சாரணர் ஒன்றுகூடல் எதிர்வரும் மாசி மாதம் 01ம் திகதி முதல் 10ம் திகதிவரை நடைபெறவுள்ளது. மேற்படி ஒன்றுகூடலில் இலங்கை பிரதிநிதியாக சாரணர் சங்கத்தின் புலைமைப்பரிசில் பெற்று வவுனியாவைச் சேர்ந்த ஸ்ரீகரன் கேசவன் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சார்ஜா 7வது சர்வதேச சாரணர் ஒன்றுகூடலில் இலங்கை பிரதிநிதியாக பங்குபெறும் சாரணன் ஸ்ரீகரன் கேசவன் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக முகாமைத்துவப்பீட மாணவனும், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவனும் என்பதுடன் 2013ம் ஆண்டு சிரேஷ்ட மாணவத் தலைவனாக செயலாற்றியதுடன்

2012ம் ஆண்டு இலங்கையின் சாரணர் உயர் விருதான ஜனாதிபதி விருதினையும் பெற்றுள்ளதுடன் தொடர்ந்து சாரணர் வளர்ச்சியில் அரும்பாடுபடும் ஓர் இளைஞன் என்பதுடன் வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் பொருளாளராகவும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளராகவும் சமூக சேவையாற்றி வருகின்றார்.

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் புதிய மடிக்கணனி அன்பளிப்பு-

jவட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த யாழ் பல்கலைக்கழக முதலாம் வருட கலைப்பிரிவு மாணவி செல்வி நே.பத்மலதா அவர்களுக்கு இம் மடிக்கணனி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இவரது சகோதரன் 2007ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும்போது காணாமல் போயுள்ளார். வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் மேற்படி மாணவி விடுத்த விண்ணப்பத்தின் அடிப்படையில் தற்பரானந்தன் சுகந்தன் ((KFC Manager Jaffna) என்பவரால் அன்பளிப்பு செய்யபட்டு

இன்று வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் தலைமை காரியாலத்தில் வைத்து வட்டுக்கோட்டை இலங்கை வங்கி கிளை உத்தியோகத்தர் மோ.மைதிலி அவர்களால் கையளிக்கபட்டது. எமது வேண்டுகோளை ஏற்று மடிக்கணனியை அன்பளிப்பு செய்த த.சுகந்தன் அவர்களுற்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)