Header image alt text

ஜனாதிபதி, பிரதமரின் வருகைக்கு யாழில் எதிர்ப்பு; கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம்

arpdam_jaff_002ஜனாதிபதி மற்றும் பிரதமர் வலி.வடக்கிற்கு தைப்பொங்கல் விழாவிற்கு வருகை தரவுள்ளதை எதிர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

யாழ். மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக இன்று காலை 10.00 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. Read more

கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்துகொள்ள பிள்ளையானுக்கு அனுமதி

pillaiyanமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதியாகவுள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு கிழக்கு மாகாண சபையின் இம்மாத அமர்வில் கலந்துகொள்ள இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. Read more

குவைத்தில் தவித்த 80 பணிப் பெண்கள் இலங்கை திரும்பினர்

Kuvit to sriவெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் ஆளான பணிப் பெண்கள் சிலர், குவைத் நாட்டில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர்.

இன்று காலை 06.50 அளவில் இலங்கைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி 80 பெண்களே இவ்வாறு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் தலையீட்டினால், மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை இம் மாத இறுதிக்குள் மேலும் சில பணிப் பெண்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்க கோரிக்கை-

janathipathiபாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரு வாரங்களுக்குள் இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக, ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டீ சில்வா தெரிவித்துள்ளார். பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை எதிர்வரும் மார்ச் 6ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இதுவரை குறித்த ஆணைக்குழுவுக்கு சுமார் 1400 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதோடு, இவற்றில் 900 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் 600 முறைப்பாடுகள் ஆணைக்குழுவின் வரையறைக்கு உட்பட்டவையல்ல எனவும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொள்ள ஆணைக்குழுவின் காலத்தை தொடர்ந்தும் நீடிக்கவுள்ளதாக, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக, ஆணைக்குழுவின் செயலாளர லெசில் டீ சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் கோரிக்கை-

akneligodaகாணாமல் போனோரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் ஒன்றை ஏற்படுத்துமாறு காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் பாரியார் சந்தியா எக்னலிகொட அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த புலமைப்பிரிசில் திட்டத்தை இந்த மாதத்திற்குள்ளே ஆரம்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் பாரியார் சந்தியா எக்னலிகொட தலைமையில் காணாமல் போனோரின் உறவினர்கள் கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே சந்தியா எக்னலிகொட இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். அத்துடன் இலங்கையில் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லும் செயற்பாடுகளை புதிய அரசியலமைப்பில் குற்றச்செயலாக அறிவிக்குமாறும் அவர் வலியுறுத்தினார். இதேவேளை இப்போராட்டத்தை தொடர்ந்து, காணாமல் போனோரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் ஒன்றை ஏற்படுத்துமாறும், காணாமல் போனோரின் தகவல்களை வெளியிடுமாறும், வலுக்கட்டாயமாக கடத்திச்செல்லும் செயற்பாடுகளை புதிய அரசியலமைப்பில் குற்றச்செயலாக அறிவிக்குமாறும் கோரி காணாமல் போனோரின் உறவினர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் மகஜர் கையளித்தனர்.

அதிகாரப் பகிர்வுடன் தீர்வு புதிய அரசமைப்பில் வேண்டும்-

sampanthanஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசால் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசமைப்பில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் உள்ளடக்கப்பட வேண்டும்.

அதேவேளை, தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அதிகாரப் பகிர்வுகளுடனான நிரந்தர அரசியல் தீர்வும் இந்தப் புதிய அரசமைப்பில் உள்வாங்கப்படவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில நாடாளுமன்றின் சபாநாயகர் டெல்மோலங்குலர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே மேற்கண்டவாறு வலியுறுத்தியதாக சம்பந்தன் எம்.பி. தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில் புதிய அரசமைப்பு மற்றும் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உட்பட பல விடயங்கள் பேசப்பட்டன என்றும் இரா.சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றில் முதன்முறையாக நீதியரசர் ஆஜர், பிணை வழங்கப்பட்டது-

courtsமுன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்றூவுக்கு பிணை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனது வீட்டுப் பணிப்பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து இவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்து. இன்று அவர் நீதிமன்றில் ஆஜரானபோது ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை ஒன்று மற்றும் ஒரு இலட்சம் ஷரூபா பெறுமதியான சரீரப் பிணைகள் இரண்டில் இவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர், நீதியரசர் பதவியிலிருந்து கடந்த 2ஆம் திகதி ஓய்வுபெற்றுள்ளதாகவும், தனது இளைப்பாறும் கடிதத்தை, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கல்கிஸையிலுள்ள தனது வீட்டில் வைத்து, 2015ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் திகதி, தன் வீட்டுப் பணிப்பெண்ணை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்று, அவருக்கெதிராகக் குற்றஞ்சாட்டி, சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவருக்கெதிராக, இலங்கை வரலாற்றில் வழக்கொன்று விசாரணைக்கு உட்படுத்தப்படுவது, இதுவே முதற்தடவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாத நிலை-

mineமுல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான பகுதிகளில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படுவதில்லை என முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ஷரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், நிலக்கண்ணி வெடி அகற்றப்படாத பகுதிகளில் அதிகளவான பகுதி முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்றது.64 கிலோ மீற்றர் பகுதியில் நிலக்கண்ணி வெடி அகற்றப்பட உள்ளது. அதில் 73 வீதமான பகுதி முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகிறது.

எதிர்வரும் இரண்டு ஆண்டு காலப்பகுதிக்குள் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஹலோட்ரஸ் என்ன தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 2020ம் ஆண்டளவில் நிலக்கண்ணி வெடிகள் முற்று முழுதாக அகற்றப்பட வேண்டுமென விரும்புவதாகவும், நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதன் மூலம் மக்களை மீள்குடியேற்ற முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஹிருணிகா உட்பட ஒன்பது பேர் நீதிமன்றில் ஆஜர்-

hirunikaகொழும்பு தெமட்டகொடை பகுதியில் நபரொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 9பேர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, குறித்த கடத்தலுடன் தொடர்புடையதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகளை மேலதிக விசாரணைகளுக்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கடத்தல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் டிபென்டர் வாகனத்தை விடுவிப்பதற்கு கொழும்பு மேலதிக நீதவான் இதன்போது மறுப்பு வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இந்த வழக்கினை மீண்டும் எதிர்வரும் 26ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரசாந்தன் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைப்பு-

prasanthanதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால், சந்தேகநபரை ஜனவரி 26ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி அரசாங்க பாடசாலையொன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு அளித்திருந்த வாக்குமூலத்தின் பிரகாரம், விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார், பூபாலப்பிள்ளை பிரசாந்தனைக் கைதுசெய்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஜப்பான் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை-

lanka japanஇலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இன்று இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கடற்பாதுகாப்பு மற்றும் கடல்சார் விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இன்று இடம்பெறும் இந்த பேச்சுவார்த்தையின் போது இலங்கை மற்றும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்களுடன் சிரேஸ்ட் அதிகாரிகளும் பங்குகொள்ளவுள்ளனர்.

இதுதவிர பாதுகாப்பு அமைச்சின் அனுசரனையுடன், கடற்பாதுகாப்பு மற்றும் கடல்சார் விடயங்கள் குறித்த பிறிதொரு சந்திப்பு, நாளை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் கைதியைப் பார்க்க ஹெரோயினுடன் சென்றவர் கைது-

arrest120 கிராம் ஹெரோயினுடன் சிறைச்சாலைக்கு உறவினரைப் பார்க்கச் சென்ற இளைஞரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பிடித்து யாழ். பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பருத்தித்துறை – மணற்காடு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் நேற்று மாலை யாழ். சிறைச்சாலைக்கு தனது உறவினரைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, அவரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பரிசோதனை செய்தனர்.

இதன்போது, அவரிடமிருந்து ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் தற்போது யாழ். பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழில் கிணற்றில் குதித்த ஜோடி, ஆண் மரணம்-

DFDFDFDFDFDFFயாழ். கோப்பாய் இராசபாத வீதியிலுள்ள தோட்டப் பகுதியிலுள்ள கிணறு ஒன்றினுள் குதித்த காதலர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் கோப்பாயைச் சேர்ந்த 19 வயதுடைய காதலன் பலியாகியுள்ளதோடு, அவரது 21 வயதான காதலி உயிர்தப்பியுள்ளார்.

மாலை வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், உறவினர்களால் இன்றுகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்த இந்த ஜோடி கிணற்றுக்குள் குதித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய பொங்கல் புதுமையய் பொங்கட்டும்-

mrs ainkaran (7)தமிழர் தம் வாழ்வியலின் முதல் ஆரம்பமாக அமைவது இவ் தைத்திருநாள். எமது பாரம்பரியங்களும் நம்பிக்கைகளும் வரலாற்றின் வழி வந்த உணர்வுகளும் இவ் திருநாளின் நம்பிக்கையில் தான் பிறக்கின்றது. இவ் நம்பிக்கைகளில் மேல் நாம் கொண்ட பற்றுறுதிகள் வெற்றி தந்து நன்றி செலுத்தும் ஓர் புனிதநாளாக இவ் நாள் அமைந்து விடுகின்றது. இன்று பொங்கிப் பரவும் இவ் புது பெங்கல் போல் எங்கள் வேண்டுகைகளும் என்றோ ஒர் நாள் வெற்றி பெற்று கல்லறைகளுக்குள் கணவுகளைச் சுமந்து காவியம் ஆகிவி;ட எங்கள் மறவர்களின் இலட்சியங்களும் வெல்லும் என்ற உறுதியன நம்பிக்கைகளோடு பெங்கல் பானையில் புது அரிசினை நாம் ஒவ்வொருவரும் மானம் மிக்க தழிழர்களாக இட்டிட வேண்டும். இவ்வாறே நாளும் பொழுதும் விடியலைத் தரும் சூரினுக்கு நன்றி செலுத்துதல் போலும் நாற் திசைகளிலும் நாம் தழிழர் என்ற இலட்சிய வெறிபிறந்திட புதிய பாதை வகுத்த நாயகர்களின் கனவு மெய்பட்டிட எம் மத்தியில் உள்ள குரோதங்களுக்கு அப்பால் கயவர்களால் கறுவறுக்கப்பட்டு உருச்சிதைக்கப்பட்ட எங்கள் நிலங்களில் இனிவருங்காலங்கள் களனி பல விளைந்து சிறந்திவும்,சிறைகளின் இரும்புச் சுவர்களுக்கிiயே விடுதலையின் விடிவிற்காய் உழைத்தவர்கள் வெளிப்பட்டிடவும், உறவுகளுக்காய் செங்குருதியை செந்நீராய் சிந்தி ஏங்கிடும் உள்ளங்களுக்கு நாமும் உறவுகளாய் இணைந்து உறுதிவழங்கிவும் ஒற்றுமையின் பால் உயர்ந்தவர்கள் தரனியில் தழிழர்கள் என்ற வரலாற்றினை உறுதியாக்க எடுப்போம் சபதம் இவ் தைத்திருநாளில்.
என்றும் தழிழ் அன்னையின் புதல்வியாய்
திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், முன்னாள் தவிசாளர், வலி மேற்கு பிரதேச சபை

மண் ஏற்ற அனுமதிப் பத்திரம் கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்-

fdfdfமண் ஏற்றுவதற்கான அனுமதி பத்திரத்தை வழங்குமாறு கோரி இன்று மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்கள் இடம்பெற்றன.

மண் அகழ்வுகளில் ஈடுபடுகின்றவர்கள் மற்றும் பாரஊர்த்தி உரிமையாளர்களால் இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் அரசடிப் பகுதியில் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மும்மொழிகளிலுமான பதாதைகளயும் ஏந்தியிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உட்பட அரசியல் பிரமுகர்களும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற அவர்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வியாழேந்திரன் அவர்களிடம் மகஜர் ஒன்றும் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தவர்களினால் கையளிக்கப்பட்டது.

வித்தியா கொலை விடயம் மூவரை மெகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்க உத்தரவு-

vithyaயாழ் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சந்தேநபர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏ.எம்.எம்.ரியால் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். மூன்று சந்தேகநபர்களை கொழும்பு மெகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்குமாறும், ஏனைய சந்தேகநபர்களை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்குமாறும் நீதவான் ஏ.எம்.எம்.ரியால் உத்தரவிட்டுள்ளார்.

யாழ் புங்குடுதீவில் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த மே 13ஆம் திகதி மாணவி வித்தியா சடலமாக மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து வித்தியாவின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி நாட்டின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களும், கவனயீர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது.

வெலிமடையில் பதற்றநிலை, விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு-

sfdfdஅமைதியின்மை காரணமாக பண்டாரவளை – வெலிமடை வீதியின் டயரபா பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

டயரபா பகுதியிலுள்ள மதுபானசாலையொன்றில் கடந்த 31ஆம் திகதி ஏற்பட்ட கைகலப்பில் இளைஞர் ஒருவர் காயமடைந்திருந்தார். இவ்வாறு காயமடைந்த நபர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், பிரதேசவாசிகள் மதுபானசாலைக்கு சேதம் விளைவித்துள்ளனர். இதன்போது, பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பொலிஸ் விசேட அதிரடி படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை இரத்தினபுரி எம்பிலிபிடிய பகுதியில் பொலிஸாருடன் இடம்பெற்ற மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் அங்கும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.

வட மாகாணசபை ஆளும்கட்சி உறுப்பினர்கள் முதலமைச்சர் கலந்துரையாடல்-

npc2_CIவடக்கு மாகாணசபையின் ஆளும்கட்சி அமைச்சர்கள் நீங்கலாக ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களது தலைமையில் யாழ். சோமசுந்தரா அவனியூவில் அமைந்துள்ள முதலமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம், கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் உள்ளிட்ட சிலர் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பதோடு, வட மாகாணசபை உறுப்பினர்கள் சுமார் 25பேரளவில் இதில் கலந்துகொண்டிருந்துள்ளனர்.

இக்கலந்துரையாடலின்போது வட மாகாணசபையின் வேலைத்திட்டங்கள் மற்றும் மாகாணசபை நிர்வாகத்தை வினைத்திறனுடன் கொண்டுசெல்வது தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டதோடு, தமிழ் மக்கள் பேரவை சம்பந்தமான விவாதங்களும் நடைபெற்றதாக தெரியவருகின்றது.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது-

karunasenaநாட்டில் போர் சூழ்நிலை காணப்படாவிட்டாலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. பாதுகாப்பு தந்திரோபாயம் குறித்து சிறிதளவு அறிந்தவர்களாலும் இதனை விளங்கிக் கொள்ளமுடியும் என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிடமிருந்து தாக்குதல்கள் விமானங்களை இலங்கை கொள்வனவு செய்ய முயல்வது குறித்து இந்தியா தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் இல்லாததால் நாடு பாதுகாப்பு கட்டமைப்புகளை கலைத்துவிடப்போகின்றது என கருதுகிறீர்களா? யுத்தம் காணப்படாவிட்டாலும் இல்லாவிட்டாலும் பாதுகாப்பை உறுதிசெய்வதே அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயம்.

இதன்காரணமாக தாக்குதல் விமானங்கள் மாத்திரமல்ல கடலோர கண்காணிப்பு கப்பல்களும் அவசியம். இலங்கை விமானப்படையை தரமுயர்த்துவதற்காக புதிய விமானங்களை கொள்வனவு செய்ய வேண்டிய தேவையுள்ளது. Read more

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தவர்களின் 42ம் ஆண்டு நினைவுதினம்- (படங்கள் இணைப்பு)

sdffdfdf1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 42ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும். 42ஆவது ஆண்டு நினைவு தினமாகிய இன்று யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் இன்றுகாலை 9.30அளவில் மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌனஅஞ்சலியும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம், அரியகுட்டி பரம்சோதி, வலிதெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் திருமதி நாகரஞ்சனி ஐங்கரன் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு நினைவுச்சுடர் ஏற்றி, மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 1974ஆம் ஆண்டு இடம்பெற்ற மேற்படி படுகொலைச் சம்பவத்தில் வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15), பரஞ்சோதி சரவணபவன் (வயது 26), வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32), யோன்பிடலிஸ் சிக்மறிங்கம் (வயது 52), குலேந்திரன் அருளப்பு (வயது 53), இராசதுரை சிவாநந்தம் (வயது 21), இராஜன் தேவரட்னம் (வயது 26), சின்னத்துரை பொன்னுத்துரை (வயது 56), சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14) ஆகியோரே உயிர் நீத்தவர்களாவர். Read more

இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கை விஜயம்-

jeyashankarஇந்திய வெளிவிவகார செயலாளர் எஸ். ஜயசங்கர் இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்யவிருப்பதாக இந்திய ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் 12ம் திகதி அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் அன்றையதினம் காலை மாலைதீவில் இருந்து இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இதன்போது அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வகீஸ்வர ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்திய வெளிவிவகார செயலாளரின் இந்த விஜயத்தின்போது யாழ்ப்பாணத்திற்கும் செல்லவுள்ளார்.

யாழில் இந்திய அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் யாழ் துரையப்பா விளையாட்டரங்கை மக்களிடம் கைளயளிக்கவுள்ளார். மேலும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 104 தமிழக மீனவர்களை பொங்கல் தினத்தை முன்னிட்டு விடுவிப்பது குறித்தும் அவர் அதிக கவனம் செலுத்துவாரென கூறப்படுகின்றது.

மீள்குடியேறிய மக்களுக்கு உதவுவதற்கு நோர்வே முன்வருகை-

norwayஅண்மையில் யாழ் மாவட்டத்தில் மீள குடியேறிய மக்களுக்கு மேலும் உதவி மற்றும் ஒத்துழைப்பினை வழங்க, நோர்வே முன்வந்துள்ளது.

இதற்கமைய இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் நோர்வே அரசாங்கத்துடன் இணைந்து இதற்கான வேலைத் திட்டத்தினை மேற்கொள்ளவுள்ளது.

இந்த திட்டத்திற்கு அமைய அண்மையில் மீள் குடியேறியவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு ஏற்ற வகையில் சட்ட ஆலோசனைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு, என்பன வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம் அண்மையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் இலங்கைப் பிரதிநிதிக்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவருக்கும் இடையே கைச்சாத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம்-

hugo swireபிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார ராஜாங்க அமைச்சர் ஹீகோ ஸ்வைர், எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதுப்பிக்கப்பட்ட இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகளை, மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவரது விஜயம் இடம்பெறவுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு, பிரித்தானிய அரசாங்கம் 6.6 மில்லியன் பவுண்கள் நிதியை வழங்கியிருந்தது.

குறிப்பாக இலங்கைப் படையினரின் பயிற்சிகள் மற்றும் மறுசீரமைப்புக்காக இந்நிதி வழங்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான விசேட தூதுவர் ஒருவரையும் நியமித்திருந்தது. இந்த நிலையில், ஜெனீவாவில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கம் தொடர்பில், பிரித்தானிய ராஜாங்க அமைச்சரின் இந்த விஜயத்தின் போது பேசப்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக இலங்கை வருவதற்கு முற்பட்டவர் கைது-

arrestசட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடல் மார்க்கமான வர முற்பட்ட ஒருவரை தமிழக பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த நடராஜன் (55) எனும் இவர், கடந்த 2011ல் தமிழகம் சென்று, வெளிப்பதிவு அகதியாக விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தங்கியிருந்ததோடு, கூலித் தொழில் செய்து பிழைப்பு நடத்தி வந்தார் என தமிழக செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில் தனது உறவினர்களை பார்ப்பதற்காக இலங்கை செல்ல நேற்று முன்தினம் பகல் இராமேஸ்வரம் வந்து, இலங்கைக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் மீனவர்களின் தகவலின்படி தனுஷ்கோடி பொலிசார், குறித்த நபரைக் கைதுசெய்து தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓட்டுசுட்டான் சின்னச்சாளம்பன் ஈஸ்வரன் வித்தியாலய புதிய கட்டிட திறப்புவிழா-(படங்கள் இணைப்பு))

image_2முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பன் ஈஸ்வரன் வித்தியாலயத்திற்கான புதிய கட்டிடத் திறப்பு விழா நேற்று (08.01.2016) பிற்பகல் 1.30 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வட மாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா, வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் (பவன்), வட மாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கனகரத்தினம்,

துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது விருந்தனர்கள் கௌரவித்து வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதைத் தொடர்ந்து பாடசாலைக்கான புதிய கட்டிடம் திறந்துவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. Read more

பொங்கல் விழாவை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடாத்த முடிவு-


sfdfdfdfஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொள்ளும் தேசிய தைப்பொங்கல் விழாவை புறக்கணிக்குமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் தீர்மானித்துள்ளனர். மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மன்னார் பிரஜைகள் குழுவின் இணைப்பாளர் அன்ரனி சகாயம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், முதலமைச்சருக்கு கொடுக்கப்பட்ட கடிதத்திற்கு பதில் கிடைக்காத பட்சத்தில் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் தமிழ் அரசியல்கைதிகளின் பெற்றோர் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களின் கோரிக்கைக்கு அமைவாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். யுhழில் நடைபெறவுள்ள தேசிய தைப்பொங்கல் தினத்தை வெகுவிமர்சையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதில் கலந்து கொள்ளவென யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு கைதிகளின் உறவினர்கள் காணாமல் போனோரின் குடும்பத்தினரால் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு கடந்த புதன்கிழமை கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டது.
Read more

ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு மரநடுகை நிகழ்வு-(படங்கள் இணைப்பு)

photo 4ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரநடுகை நிகழ்வு நேற்றுக்காலை 9.30மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வட மாகாணசபை உறுப்பினர் திரு. கந்தையா சிவநேசன்(பவன்),

மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள். Read more