Header image alt text

பாலத்தடிச்சேனை பொதுமக்களின் காணிகள் படையினரால் ஒப்படைப்பு-

sdfdfதிருகோணமலை மூதூர் பிரதேசத்திலுள்ள பாலத்தடிச்சேனை இராணுவ முகாம் அமைந்திருந்த காணிகளும் மக்கள் குடியிருப்பு பிரதேசங்களும் 25 ஆண்டுகளின் பின்னர் உரிமையாளர்களிடம் நேற்று மீளக் கையளிக்கப்பட்டன. 1990ம் ஆண்டு தொடக்கம் இராணுவ முகாம் அமைந்திருந்த குறித்த காணிகளில், இறுதியாக முகாமிட்டிருந்த இராணுவத்தின் 5வது ஆட்லெறி படைப்பிரிவு தற்போது வெளியேறியுள்ளது. 1985ம் ஆண்டு மூதூரில் இடம்பெற்ற இன வன்முறைகளை அடுத்து பாலத்தடிச்சேனை கிராம மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய நிலையில், இராணுவம் அந்த இடத்தில் முகாம் அமைத்திருந்தது. இங்கிருந்த ஆலயம், தோட்ட நிலங்கள் மற்றும் குடியிருப்பு நிலங்களை ஒரு தொகுதியாகக் கொண்டு பாதுகாப்பு அரண்களும் வேறு கட்டடங்களும் அமைக்கப்பட்டுள்ளதால் தங்களின் காணிகளின் எல்லைகளை அடையாளம் காண்பது சிரமமாக இருப்பதாக அம்மக்கள் கூறியுள்ளனர். Read more

மஸ்கெலியாவில் தொழிலாளர் குடியிருப்புகள் எரிந்து நாசம்-(படங்கள் இணைப்பு)

sfdf (2)நுவரெலியா, மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் இன்றுபகல் 12மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 16 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 16 குடும்பங்களைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிகமாக ஆலய மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ ஏற்பட்டபோது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. எனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீக்கிரையாகாமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது. Read more

ஹிருணிகா பிரேமச்சந்திர கைதாகி பிணையில் விடுவிப்பு-

hirunikaஇன்றுகாலை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஹிருனிகா பிரேமசந்திர ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

தெமட்டகொடை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டரில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர இன்றுகாலை கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரண்டது-

trainகுருநாகலிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் கொழும்பு கோட்டை மற்றும் மருதானை பகுதிகளுக்கிடையில் தடம்புரண்டுள்ளது.

இன்றுகாலை 9 மணியளவில் ரயில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது. எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ரயிலை மீண்டும் தண்டாவாளத்தில் நிறுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது. ரயில் தடம்புரண்டதை அடுத்து தடைப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதுடன் பிரதான பாதையின் போக்குவரத்து வழமை போன்று இடம்பெறுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை-இராணுவதளபதி-

army chiefநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவத்தளபதி கிரிசாந்த டி சில்வா இன்று தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று நிருபர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இராணுவம் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்குகின்றது.

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கான வாய்ப்பில்லை. இராணுவம் அதற்கு ஒருபோதுமே அனுமதிக்காது,

வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு இராணுவம் தொடர்ந்தும் உதவும் என இராணுவத்தளபதி கிரிசாந்த டி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2600 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்-

graduateஅரச சேவையில் மேலுமொரு தொகுதி பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, 2600 பட்டதாரிகளுக்கு அரச நியமனங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

அண்மையில் பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில், நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இதில் 2012ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான நிகழ்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது. இவர்களுக்கான நியமனங்களை பிரதமர் வழங்கி வைக்கவுள்ளார்.

வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் 30 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு. (படங்கள் இணைப்பு)-

a - Copyயாழ். வேலணைப் பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட தாய் தந்தையை இழந்த பிள்ளைகள் வயதான பெற்றோரின் பிள்ளைகள் மற்றும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் என சுமார் 30 பாடசாலை மாணவர்கள் கஸ்டமான சூழல் நிலைகளினால்

பாடசாலைக்கு செல்ல முடியாத நிலையில் அவர்கள் தொடர்ந்து கல்வியினைக் கற்பதற்கு மிக பிரதான தடையாக காணப்படும் பாடசாலை உபகரணங்களை தந்துதவுமாறு வேலணைப் பிரதேச செயலகத்தினால் வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கு அமைவாக இன்று வேலணைப் பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் முன்னிலையில் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் சுமார் 31875 ரூபா பெறுமதியான புத்தகப்பைகள், அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பேனாக்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் 30 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.     (வட்டு இந்து வாலிபர் சங்கம்)
Read more

தோழர் சுந்தரம் அவர்களின் 34ம் ஆண்டு நினைவுநாள் சுழிபுரத்தில் அனுஷ்டிப்பு-

P1110567மறைந்தும் மறையாது மக்கள் மனங்களில் என்றும் வாழ்ந்து வரும் தோழர் சுந்தரம் அவர்களின் 34ம் ஆண்டு நினைவு நாள் வட்டுக்கோட்டைத் தொகுதி தோழர்களால் நேற்று (07.01.2016) சுழிபுரத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இவ் நிகழ்வு தோழர் கண்ணன் அவர்களது தலைமையில் அன்றுமாலை 6.30 மணியளவில் அக வணக்கத்துடன் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாக தோழர் சுந்தரம் அவர்களின் நிiவுருவப்படத்திற்கு முன்பாக அமரரது சகோதரனின் புதல்வர் போ.சிவகுமார் நினைவுச் சுடரினை ஏற்றினார். தொடர்ந்து தோழர் சின்னக்குமார், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் திரு. பா.கஜதீபன் ஆகியோர் நினைவுச் சுடர் ஏற்றினர். தொடர்ந்து அமரர் தோழர் சுந்தரம் அவர்களின் திரு உருவப்படத்திற்கு அமரரது சகேதரனின் புதல்வர் போ.சிவகுமார் அவர்கள் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முன்னாள் தோழர்கள் பொதுமக்கள் உறவினர் என பலரும் மலர் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து நினைவுரைகள் இடம்பெற்றன. இவ் நிகழ்வின்போது வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் திரு. பா.கஜதீபன் அவர்களின் உரையும், ஜேர்மனியிலிருந்து தோழர் ஜெகநாதன், கொழும்பிலிருந்து புளொட் தலைவரும் பாராளுமன்ற உருப்பினருமாகிய கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றன. Read more

இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்கு நோர்வே முழு ஆதரவு-

NORWAYவடக்கு, கிழக்கு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் இலங்கை அரசு பொறுப்புடன் செயற்படுவதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கின்றோம். மீள்குடியேற்றம் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதேவேளை, இதனை நாங்கள் அவதானித்து வருகின்றோம் இவ்வாறு நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரெண்ட் தெரிவித்தார். ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த அவர் நேற்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இருதரப்பு பேச்சுகளில் ஈடுபட்டார். அதன்பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட பல்லின கலாசாரமே நாட்டை பலப்படுத்துகின்றது. வடக்கில் அமைதி பேணப்படுவது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களது மீள்குடியேற்றம் என்பது இலங்கை அரசு முக்கிய கவனம் செலுத்தவேண்டிய அம்சங்களாகும். இது தொடர்பில் புதிய அரசும் முன்னெடுத்துள்ள திட்டங்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடலின்போது பேசப்பட்டது. Read more

அரச சேவையாளர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு-

rajithaஅரச சேவையாளர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை 65ஆக உயர்த்துவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றை அமைச்சரவையில் சமர்பிக்க இருப்பதாக சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரச சேவையாளர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவதற்கு தான் எதிரானவர் என்று அவர் கூறியுள்ளார். பானந்துறை ஸ்ரீ சுமங்கள ஆண்கள் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். கெம்ப்ரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்களில் 85 வயதிலும் அறிவை வழங்கக்கூடிய பேராசிரியர்கள் இருப்பதாகவும், அறிவைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய சரியான வயதில் இலங்கை அரச சேவையாளர்கள் ஓய்வு பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நடைமுறை நிறுத்தப்பட்டு அரச சேவையாளர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச மீண்டும் ஆஜர், குமார் குணரட்ணம் விளக்கமறியலில்-

kumar gunaratnamமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். ரக்னா லங்கா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சாட்சி வழங்குவதற்காக கடற்படை அதிகாரிகள் சிலரும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினமும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைகளுக்கான ஆஜராகியிருந்தார். இதேவேளை முன்னிலை சோசலிஸக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னம் எதிர்வரும் 21ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடிவரவு குடியகல்வுச் சட்டத்தை மீறி இலங்கையில் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் 4ம் திகதி குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் செயற்பாடுகளுக்கும் ஜனாதிபதிக்கும் ஐ.நா செயலாளர் பாராட்டு-

ban ki moonஇலங்கையில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி முதலாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் செய்தித் தொடர்பாளர் இது தொடர்டபான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்நாட்டு மக்களுக்கு நீண்ட கால அமைதி, நிலையான தன்மை மற்றும் சுபீட்சத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட, விரிவான சீர்திருத்தப்பட்ட வேலைத்திட்டத்திற்கான அரசின் அர்ப்பணிப்பை ஐ.நா செயலாளர் மதிப்பதாக தெரிவித்துள்ளார். நல்லாட்சியை ஏற்படுத்துதல் மற்றும் பலமிக்க சகவாழ்வுக்காக கடந்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் முன் வைக்கப்பட்ட யோசனைகளின் முதல் கட்டம் செயல்படுத்தப்படுவதை ஏற்றுக் கொள்வதுடன் அதனை மேலும் மேம்படுத்த வேண்டும் என்றும் ஐநா செயலாளர் கூறியுள்ளார். நீண்டகால அரசியல் தீர்வுக்காக நாடு பூராகவும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் காட்டும் அக்கறைக்கு உதவியளிப்பதாக பான் கீ மூன் தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் ஒன்றை கொண்டு வருவதற்கான அரசின் முயற்சிகளை பாராட்டியுள்ள பான் கீ மூன் அதற்காக ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்க லே இயக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு-

sqஸ்டிக்கர் இயக்கமாக அண்மையில் தொடங்கப்பட்ட ‘சிங்க லே’ இயக்கத்தினர், நேற்று முன்தினம் மாலை, ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தி, தங்களது இயக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். யக்கலமுல்லே பாவர தேரரே இந்த சிங்களே இயக்கத்தின் தலைவர் ஆவார். அவர், ஊடகங்களுக்கு பகிரங்கமாக பேசியது இதுவே முதல் தடவையாகும். தமது இயக்கம் ‘சிங்கள ஜாதிக பலமுலுவ’ என அழைக்கப்படும் என்றும் இது, புத்தரின் போதனையான ‘சகல உயிர்களும் மகிழ்ச்சியோடு இருக்கட்டும்’ என்பதை அடிப்படையாகக் கொண்டது எனவும் அவர் இதன்போது கூறினார். முன்னர் பொதுபல சேனாவின் செயற்பாட்டாளராக இருந்த மிதில்லே பஞ்ஞலோக்க தேரரே இப் புதிய இயக்க பொதுச் செயலாளர் ஆவார். அரசியல் பூசல்களைத் தமது இயக்கத்தினுள் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவ்வியக்கம் இதன்போது அறிவித்துள்ளது.

ஹிருணிகாவை கைதுசெய்ய முடியாது-அமைச்சர் ராஜித-

hirunikaகொழும்பு தெமட்டகொடயில் இடம்பெற்ற கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவைக் கைது செய்யுமாறு, எதிரணியினராலும் பல்வேறு தரப்பினராலும் எழுப்பப்பட்டுவரும் கோஷத்துக்காக, அவரைக் கைது செய்யமுடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில், ‘மஹிந்த ராஜபக்ஷவை ஏன் கைது செய்யவில்லை, நாமல் ராஜபக்ஷவை ஏன் கைது செய்யவில்லை என்று எல்லோரும் கோஷமெழுப்பி வருகின்றனர். எனினும், அவையனைத்தும் அரசாங்கத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டள்ளது’ என்று அவர் பதிலளித்தார். ‘அவ்வாறு எடுத்தவுடன் கைதுசெய்வதற்கு இது ராஜபக்ஷவினுடைய அரசாங்கம் அல்ல, இது சிறிசேனவினுடைய அரசாங்கம்’ என்றும் அவர் கூறினார். Read more

கலாசாரத்தைப் பாதுகாக்கும் பணியில் தமிழ் மக்கள் பேரவை-

peravaiதமிழ் மக்கள் பேரவையானது தமிழர் தாயகமெங்கும் கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்கும் பணியை முன்னெடுக்கவுள்ளது. அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ் மக்களின் உரிமைகள், நலன்களைப் பாதுகாக்கும் நோக்குடன் மக்கள் இயக்கமாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையானது கடந்த 2 ஆம் திகதி இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தயாரிக்கும் நிபுணர்களடங்கிய உபகுழுவின் செயற்பாட்டை ஆரம்பித்து வைத்தது. அந்த உபகுழுவின் பணி வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் தமிழர் தாயகமெங்கும் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கும் உயரிய நோக்குடன் துறைசார் வல்லுநர்களடங்கிய உபகுழுவை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இக்குழுவில் கலை, கலாசாரத்துடன் சம்பந்தப்பட்ட துறைசார் வல்லுநர்களை இணையுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. ஒரு இனத்தின் எதிர்கால வளமும் வாழ்வியலும் தனித்து அரசியல் உரிமைகளால் மட்டும் தீர்மானிக்கப்பட்டு விடுவதில்லை. மாறாக அந்த இனத்தின் மரபுரிமைகளும் கலை, கலாசாரப்பண்பாட்டு அடையாளங்களும் கட்டிக்காக்கப்படுவதிலும் தங்கியுள்ளதென்ற உண்மையை நாம் ஒருபோதும் மறந்துவிட முடியாது. Read more

நோர்வே வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்-

NORWAYநோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் போக் பிரண்டோ இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். இன்றுகாலை 8.30 அளவில் டுபாயில் இருந்து வந்த ஈ.கே.650 என்ற விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவருடன் ஏழு பேர் கொண்ட தூதுக்குழு ஒன்று உடன் வந்துள்ளது. இலங்கைக்கும் நோர்வேயிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை புதுப்பிக்கும் நோக்கில், அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். 2006ம் ஆண்டுக்கு பின்னர் நோர்வேயின் அமைச்சர் ஒருவர் இலங்கை வருகின்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அவர், ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அத்துடன் இன்றுமாலை வர்த்தக மாநாடு ஒன்றிலும் அவர் கலந்துகொள்ள ஏற்பாடாகியுள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை, இலங்கையின் உள்நாட்டுப் போருக்கு முடிவுகட்டும் அமைதி முயற்சிகளில் நடுநிலையாளராகச் செயற்பட்ட நோர்வே, அந்த முயற்சியில் தோல்வியடைந்த பின்னர் தற்போது மீண்டும் இலங்கையுடன் அரசியல் உறவுகளைப் புதுப்பிக்கவுள்ளது என்றவாறு ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

மக்களின் குறைகளை ஜனாதிபதிக்கு தெரிவிக்க புதிய சேவை-

maithriஇலங்கையில் வாழ்கின்ற சகல மக்களின் குறைகளையும் கேட்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை உரிய அமைச்சுக்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களிலிருந்து அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி செயலகத்தினால் புதிய சேவையொன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. “ஜனாதிபதிக்கு தெரிவிக்க” எனும் பெயரிலான இந்தச் சேவை எதிர்வரும் 8ம் திகதி காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட இருக்கின்றது. இந்த சேவையூடாக பொதுமக்கள் தங்களுடைய குறைகள் தேவைகள் மற்றும் யோசனைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு நேரடியாக கொண்டுவரலம். 1919 என்ற இலக்கத்தினை எந்தவொரு நிலையான மற்றும் கையடக்க தொலைபேசிகளுடாகவும் அழுத்தி இலக்கம் இரண்டை அழுத்துவதனூடாக இந்த சேவையினை பெற்றுக்கொள்ளலாம். அதேவேளை சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இச்சேவையினை பெற்றுக்கொள்ள முடியும் என்பது விசேட அம்சமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பஸ்தர் மரணம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை-

dffஇரத்தினபுரி எம்பிலிபிடிய பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. அண்மையில் எம்பிலிபிடிய புதிய நகர்பகுதி வீடொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஏற்பட்ட முறுகலையடுத்து பொலிஸாருக்கும் மக்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த நான்கு பொலிஸார் உட்பட ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சம்பவத்தின்போது மாடியிலிருந்து கீழே விழுந்தநிலையில் கடும் காயமடைந்த இளம் குடும்பஸ்தர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது மரணத்துக்கு பொலிஸாரே பொறுப்பு கூறவேண்டும் என்று கூறி எம்பிலிபிடிய பகுதியில் பாரிய ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. எம்பிலிப்பிட்டி மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே ஏராளமான மக்கள் கூடியிருப்பதால் அதனை சூழவுள்ள நகரின் அனைத்து வீதிகளிலும் போக்குவரத்துக்கு தடையேற்பட்டுள்ளது. சிலர் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளனர்.

ஜனாதிபதி ஆணைக்குழுமுன் ஆஜராகுமாறு கோட்டாபயவிற்கு அழைப்பு-

Gotabaya Rajapakse (2)முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக அறிவிப்பு விடுக்கப்பட்ட தரப்பினருக்காக கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அழைப்பு அழைப்பு விடுத்ததாக ஆணைக்குழு செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார் சாட்சியமளிப்பதற்காக மேலும் ஐவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னர் சாட்சியமளித்து வருவதாகவும் ஆணைக்குழு செயலாளர் கூறியுள்ளார். ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் இதற்கு முன்னரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் வாக்குமூலம் அளித்திருந்திருந்தார்.

கடத்தல் விவகாரம், ஹிருணிக்காவின் ஆதரவாளர்களுக்கு பிணை-

hirunikaகொழும்பு, தெமட்டகொடயில் இளைஞர் ஒருவரைக் கடத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவின் ஆதரவாளர்கள் ஏழு பேருக்கும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது. தலா இரண்டு இலட்சம் ஷரூபாவான சரீரப் பிணைகளில் சந்தேகநபர்களை விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் இன்று நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில், சாட்சியாளர்களால் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டதாக முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர். சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியாளர்களிடம் சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளதாகவும், பொலிஸார் குறிப்பிடுவது போன்று அது குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார். இதேவேளை, இதுவொரு கொலைக்குற்றச்சாட்டு அல்ல என்பதால், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குமாறு, பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க உள்ளிட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐ.எஸ் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து இலங்கை அவதானம்-

isisஐ.எஸ்.ஐ.எஸ் எனப்படும் தீவிரவாதிகள் தொடர்பில் பாதுகாப்புப் படையினர் மற்றும் புலனாய்வுத் துறையினர், முழு அவதானம் செலுத்தி வருவதாக, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இஸ்லாமிய அரசு எனப்படும் குறித்த தீவிரவாதக் குழுக்களால் நாட்டில் முன்னெடுக்கப்படுவதாக சந்தேகிக்கப்படும் அவர்களது தொடர்புகள் குறித்து அண்மையில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.எஸ் அமைப்பின் நடவடிக்கைகள் குறித்து 24 மணித்தியாலங்களும் பாதுகாப்பு படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக, பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த 37வயதான ஒருவர் சிரியாவில் இடம்பெற்ற வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டார். இதனையடுத்து இலங்கையர்கள் எவரும் ஐ.எஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக உறுதியான தகவல்கள் எதுவுமில்லை என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.