ஐ.நா ஆணையாளரின் யாழ் விஜயமும் சந்திப்புகளும்-(படங்கள் இணைப்பு)
இலங்கைக்கு நேற்று வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹ_சைன் யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். இதன்பொது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனை இன்றுகாலை 10மணியளவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது, முதலமைச்சர் விக்னேஸ்வரன், மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. மேலும், முதலமைச்சர் அலுவலகம் முன்பாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் நின்றிருந்த நிலையில் அவர்களையும் ஆணையாளர் சந்தித்துள்ளார். இதேவேளை தமது ஐ.நா ஆணையாளருடனான சந்திப்பு குறித்து வடமாகாண முதலமைச்சர் கருத்துக் கூறுகையில், அரசியல் கைதிகள் விடயத்தில் பொதுமன்னிப்பை விட அவர்களின் வழக்கு விசாரணை சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு விடுதலை செய்யப்படுதல் தான் சரியானதாக அமையும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்தார். Read more