இடமாற்றத்திற்கு எதிராக வவுனியா மாணவர்கள் ஆர்ப்பாட்டம்-

rtrஆசிரியர் ஒருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதையடுத்து வவுனியா தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். குறித்த ஆசிரியரின் இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு கோரி வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரே அதிகார துஸ்பிரயோகத்தை நிறுத்து, முறைகேடான இடமாற்றத்திற்கு முறையான தீர்வு வேண்டும் போன்ற பல்வேறு பதாதைகளை மாணவர்கள் ஏந்தி இருந்தனர்.

குறித்த பாடசாலையில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் பிள்ளையும் கல்வி கற்கின்ற நிலையில் அந்தப் பிள்ளையை குறித்த ஆசிரியர் கண்டித்ததன் காரணமாகவே இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுதந்திர கட்சியின் ஏழு பேரின் உறுப்புரிமை இரத்து-

slfpஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் 07 பேரின் கட்சி உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த 07 பேருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

இன்றுபகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கட்சியின் தலைமையகத்தில் கூடியிருந்த போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக தனித்து செயற்படுவதற்கு அனுமதி வழங்க முடியாது என்றும் அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

தெற்கு அதிவேகப் பாதையில் வேன் தீப்பற்றியது-

highwayதெற்கு அதிவேகப் பதையில் வெலிப்பனையில் இருந்து கடவத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று தீப்பற்றியுள்ளது.

இன்று நண்பகல் 12.00 மணியளவில் தெற்கு அதிவேகப் பதையின் வெலிப்பன மற்றும் தொடங்கொடைக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் 39வது கிலோமீற்றர் கட்டைக்கு அருகில் குறித்த வேன் தீப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்துள்ளனர். குறித்த வேனில் சாரதி மாத்திரம் இருந்துள்ளதுடன் அவருக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

அரசின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஆலோசனை வழங்கலாம்-

maithriஇலங்கை வெளிவிகார அமைச்சின் எற்பாட்டில் இலங்கை மக்களின் நல்லிணக்கப் பொறிமுறைகளின் செயற்பாடுகளுக்கு ஆலோசனை பெறுவதற்கான இணையத்தளம் அங்குராப்பணம் செய்யும் நிகழ்வு இன்று உத்தியபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இந்த அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது. வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹொட்டியாரட்சி ஆகியோர் தலைமையில் இணையத்தளம் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. றுறுறு.ளுஊசுஆ.புழுஏ.டம என்ற இணையத்தளம் ஊடாக மக்கள் பல பாகங்களில் இருந்தும் மூன்று மொழிகளிலும் இலங்கை நாட்டின் நல்லிணக்கப் பொறிமுறைகளின் செயற்பாடுகளுக்கு ஆலோசனைகளை வழங்க முடியும். இவ்வருடம் ஏப்ரல் மாதம் வரை இவ் இணைத்தளம் ஊடாக மக்கள் ஆலோசனைகளை வழங்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இறுதி அறிக்கைகள் எதிர்வரும் மேமாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, சிவில் அமைப்பினர்கள் அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நியூஸிலாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம்-

newzealandநியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ இந்த மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 23ம் திகதி அவர் இலங்கை வரவுள்ளதாக இலங்கைக்கான நியூஸிலாந்து தூதரக பேச்சாளர் ஒருவர் கூறினார்.

நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ 03 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்க உள்ளதுடன் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

நியூசிலாந்து முதலீட்டு நிறுவனங்கள் மேற்கொள்கின்ற விவசாய வேலைத் திட்டங்களை நியூஸிலாந்து பிரதமர் ஆரம்பித்து வைக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதவிர இலங்கையிலுள்ள நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் க்ரஹம் மோர்டன் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை அண்மையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

களிமண்ணுக்குள் இருந்து கைக்குண்டு மீட்பு-

granadeமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி முன்மாரி கிராமத்தின் சூனையன்குடா எனும் இடத்தில் களிமண்ணுக்குள் இருந்து கைக்குண்டொன்று இன்றுகாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப் பகுதியில் உள்ள தொழிலாளி ஒருவர் களிமண்ணை கொத்தியபோது குறித்த கைகுண்டு களி மண்ணுக்குள் இருப்பதைக் கண்டுள்ளார்.

இது தொடர்பாக கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு தெரிவித்ததை தொடர்ந்து பொலிஸார் கைக்குண்டினை மீட்டுள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜகத் புஷ்பகுமார ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்-

jagathமுன்னாள் தெங்கு அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஷ்பகுமார பாரிய மோசடிகள் சம்பந்தமாக கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்றுகாலை ஆஜராகியிருந்தார்.

இவரிடம் புத்தல பிரதேசத்தில் சுமார் 45 ஏக்கர் தனியார் நிலத்தில் தென்னை பயிரிடுவதற்கான கன்றுகள், தொழிலாளர் மற்றும் பிற வசதி தெங்கு பயிர்ச்செய்கை சபை மூலம் பெற்றுக் கொண்டது தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.

இது தொடர்பான விசாரணைகளுக்காக அவர் நேற்றைய தினமும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.