Header image alt text

வவுனியா மாணவி படுகொலை: வடக்கில் முழு கடையடைப்பு  ஹர்த்தால்

north_jaffnaஇலங்கையின் வடக்கே, வவுனியாவில் பள்ளி மாணவி ஹரிஸ்ணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று கோரி நடத்தப்பட்ட கடையடைப்பினால் வடக்கு மாகாணத்தில் இன்று புதன்கிழமை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இந்தக் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது. பாடசாலைகள் இயங்கவில்லை. அரச அலுவலகங்கள், வங்கிகள் என்பன மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இயங்கின. Read more

செய்யாத குற்றத்திற்காக சிறையில் இருக்கின்றோம் – நளினி
 
nalini‘எங்களின் கைகள் யாருடைய ரத்தத்தினாலும் நனைக்கப்படவே இல்லை’  இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள கைதிகளான தாங்கள் யாரும் குற்றம் ஏதும் செய்யாதவர்கள் என்று நளினி கூறியுள்ளார்.

ஒருநாள்-பரோலில் வெளியில் வந்திருந்த நளினி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

‘எங்கள் கைகள் யாரையும் கொலைசெய்யவில்லை…25 வருஷங்கள் அப்பாவிகளான நாங்கள் சிறையில் இருக்கிறோம்’ என்றும் கூறினார் நளினி. Read more

ஹரிஸ்ணவியின் கொiயைகண்டித்து வவுனியா மற்றும் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டங்கள்

vavuniastudentrapedemoவவுனியாவில் ஹரிஸ்ணவி என்ற 13 வயது மாணவி வீட்டில் தனிமையில் இருந்த போது இனந்தெரியாதவர்களினால் பாலியல் குற்றம் புரியப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வவுனியா மற்றும் கிளிநொச்சி நகரங்களில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.
 
ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதியும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யவும் கோரினார்கள். Read more