Header image alt text

உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் பா.உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன் சந்திப்பு

yiuyi (7)கொழும்பு புதிய மெகசின் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் கடந்த திங்கட்கிழமை (22.02.2016) ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் இரண்டு கைதிகளும், கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் 14 கைதிகளும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான துஷார உபுல்தெனிய குறிப்பிட்டிருந்தார். Read more

போராடி நிலத்தை மீட்போம் என வலி.வடக்கு மக்கள் உறுதி 

vali_CIஎமது நிலத்திற்காக  போராட போகின்றோம். வன்முறை சார் போராட்டமாக போராடாமல், அஹிம்சை ரீதியாக போராடி எமது நிலத்தை மீட்போம் என வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வசித்து வரும் மக்கள் உறுதி பூண்டுள்ளனர்.

வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து 38 நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்களின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை காலை சபாபதிப்பிள்ளை முகாமில் ஒன்று கூடி கலந்துரையாடினார்கள். அந்த கலந்துரையாடலின் முடிவில் முகாமினுள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் மக்கள் தமது கருத்துக்களை தெரிவிக்கும் போது , Read more

போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் மகாநாடு -கொழும்பு

இலங்கை போரால் பாதிக்கப்பட்ட பெண்களின் சங்கத்தின் மகாநாடு இன்று (26.02.2016) காலை குறித்த சங்கத்தின் தலைவர் திருமதி.விசாகா.தர்மதாச தலைமையில் கொழும்பு யூனியன் பிரதேச பகுதியில் அமைந்துள்ள கஜிக் கில்ட்டன் கொட்டலில் இடம் பெற்றது. இந்; நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர். இந்; நிகழ்வில் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி.விஜயகலா.மகேஸ்வரன், வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன், நல்லூர் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் திருமதி.கோமதி.இரவிதாஸ் உட்பட பல அரசியல் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர். இவ் நிகழ்வின் போது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன், அவர்கள் 16 அம்சங்கள் மற்றும் சீர்திருத்த கோரிக்கைகளை போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்க தலைவி திருமதி.விசாகா.தர்மதாச அவர்களிடம் ஒப்படைத்தார். அங்கு ஒப்படைக்கப்பட்ட கோரிக்கைகள் வருமாறு. Read more