அமைச்சர் சரத் பொன்சேகா தலதாமாளிகைக்கு விஜயம்-

fonseka ministerபிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் முதற்தடவையாக கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்றையதினம் சனிக்கிழமை முற்பகல் தலதா மாளிகைக்கு விஜயம் செய்து அங்கு இடம்பெற்ற வழிபாடுகளிலும் கலந்துகொண்டார்.

அமைச்சருடன் அவரது பாரியார் அனோமா பொன்சேகாவும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டார். தலதா மாளிகைக்கான விஜயத்தை முடித்துக்கொண்ட பீல்ட் மார்ஷல் பொன்சேகா, மல்வத்துப்பீட மகாநாயக தேரரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டுள்ளார்.

கிளிநொச்சி செல்வா நகர் பெண்ணுக்கு வாழ்வாதார உதவி-

gகிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பமான வனசுதர் அன்னலட்சுமி தமக்கு ஏற்கனவே வேள்ட்விசன் நிறுவனத்தினால் மாடு வழங்கப்பட்டுள்ளது எனவும் இதற்கான மாட்டுக் கொட்டகையை அமைத்துத் தருமாறும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் கோரியிருந்தார்.

இதற்கிணங்க எமது சங்கத்தின் கோரிக்கையை ஏற்ற புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த திரு. சு.ரவிராஐன் 20,000ரூபா நிதி உதவியினை வழங்கியிருந்தார். இவ் நல்லுள்ளம் கொண்ட ரவிராஐனின் உதவியினால் வனசுதர் அன்னலட்சுமி தனது வாழ்வாதரத்தினை முன்னேற்றுவதற்கான வழியினை ஏற்படுத்தியுள்ளார்.

எமது சங்கத்தின் ஊடாக ஏற்கனவே இவ் குடும்பத்தினருக்கு அவர்களின் வாழ்வாதரத்தினை முன்னேற்றுவதற்காக கோழி வளர்ப்புக்கு என சுமார் 33,000ரூபா நிதி மூன்று கட்டங்களாக வழங்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. (வட்டு. இந்து வாலிபர் சங்கம்)

வரலாறு பெற்ற மகளீர் போற்றப்பட வேண்டும்-திருமதி நாகரஞ்சினி ஐங்கரன்-

mrs ainkaran (7)அனைத்துலக மகளிர் நாள் பங்குனி 8 என்பது மகளிரின் வெற்றி நாளாகவே கொள்ளப்பட வேண்டும். இவ் உலகில் பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறைகட்கும் அச்சம் அழிக்கின்ற நாளாக இது அமைந்திட வேண்டும். இவ் நாளில் இவ் தரணிதனில் மாந்தர்கள் தமக்கு பெருமையையும் புகழினையும் அளிக்கின்ற நாளாக அமையட்டும். இன்று உலகின் பல்துறைசார் ஒழுங்கிலும் பெண்கள் தமக்கு தனித்துவமான நிலையினை உருவாக்கியுள்ளனர். இதற்கும் மேலாக எமது தாய் நிலத்தில் அடுப்பங்கரை மட்டுமே உரிமையாகிக் கிடந்த நிலைக்கு அப்பால் தரணியில் தமிழ் வென்றிட களமாடி உரமாகி தமிழ் பெண்களின் வீர வரலாற்றை இலக்கியங்களுக்கும் அப்பால் சென்று நிகழ்வுகளால் நிஜமாக்கிய மங்கையரின் வரலாறு பூசிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இவ்வாறான வரலாறினை நிகழ்த்திய புனித மங்கையரைக் கொண்டிருந்த இவ் செந்நிலத்தில் அனைவரும் மங்கையரை இவ் திரு நன்நாளில் போற்றி அவர்களின் பெருமையினை பறைசாற்றிட வேண்டும். கடந்து விட்ட பல நாட்களில் நாம் பெற்றுவிட்ட வரலாற்றினை அழித்திட எதிரிகள் மட்டும் அல்ல துரோகிகளும் வஞ்சகர்களும் எமை சூழ்ந்து சூழ்ச்சிகள் பல செய்து ஏதிலிகளாக்க பல முயற்சிளும் பல கோணங்களில் ஏற்படுத்திய வண்ணமே உள்ளனர். இவர்கட்கு இதுதான் தழிழ் பெண்ணின் வீரம் விளைந்திட்ட வரலாறு என காண்பிப்பதற்கு வெகுவிரைவில் காலம் மலர்ந்திட வழிபிறக்கும். சுட்டெரிக்கும் சூரியனின் அனல் காற்றாகி வெகுவிரைவில் பெண் கொடுமைக்கு விடை கிடைத்திடும்.

என்றும் தமிழ் அன்னையின் புதல்வியாய்
திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், முன்னாள் தவிசாளர், வலிமேற்கு பிரதேசசபை.