அரசியல் கைதிகளுக்கு ஆதரவளித்து யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்-

trytyசிறைகளிலுள்ள அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று யாழ். முனியப்பர் கோயிலுக்கு முன்பாக அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாடு செய்திருந்த இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில், வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வட மாகாண சபை உறுப்பினர்கள் இமானுவல் ஆனோல்ட், ஆரியகுட்டி பரஞ்சோதி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், மன்னார் பிரஜைகள் குழுவின் அங்கத்தவர்கள், சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள், சமயத் தலைவர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு தங்கம் கடத்திச் செல்ல முற்பட்டவர்கள் மடக்கிப்பிடிப்பு-

sassds6.94 கிலோ கிராம் தங்கத்தை சட்டவிரோதமாக இந்தியாவிற்கு கொண்டு செல்ல முற்பட்ட இலங்கையர்கள் இருவரை யாழ்ப்பாணம், யாழ். மாதகல் பகுதியில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தங்கத்தின் பெறுமதி சுமார் 34.5 மில்லியன் ரூபா என்று தெரிவிக்கப்படுகின்றது. கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, மீனவர்களைப் போல் செயற்பட்டு, மீன்பிடி உபகரணங்களுடன் படகில் கொண்டுசெல்லப்பட்ட இந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது கைது செய்யப்பட்ட இருவர் மற்றும் கைப்பற்றப்பட்ட தங்கம் என்பவற்றை யாழ். சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரியவருகிறது.

சிறைச்சாலை பஸ்களுக்கு கறுப்புக் கண்ணாடி பொருத்த நடவடிக்கை-

retrtrசிறைச்சாலை பஸ்கள் அனைத்துக்கும் கறுப்புக்கண்ணாடி பொருத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் நிஷாந்த தனசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பஸ்கள், முக்கியமான சந்தேக நபர்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம், தெமட்டக்கொடை பகுதியில் வைத்து சிறைச்சாலை பஸ்ஸொன்றின் மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டதனாலேயே இந்த திடீர் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.